Contact Us

Name

Email *

Message *

“மகாவம்சம்” ஒரு வரலாற்று தொகுப்பு.

“மகாவம்சம்” ஒரு வரலாற்று தொகுப்பு.


வரலாற்று நூலைப் படிக்கு முன் வரலாற்று ஆசிரியனைப் படி என்பது வரலாற்று மாணவர்களின் அடிச்சுவடி.

இன, மத, மொழி, கலாசார, பண்பாட்டு இயல்புகளுக்குள் தொலைந்து போயிருக்கும் மனிதனிடமிருந்து  உண்மை வரலாற்றை பிரித்துப் பார் என்பது அதன் பொருள்.
அந்த வகையில் புனிதமாகப் போற்றப் பட்டு வரும் மகாவம்சம் பார்க்கப் படவில்லைஎன்பதும் உண்மை.

மகாவம்சநூல் கிறிஸ்துவுக்கு பின் 5ம் நூற்றாண்டில்தான் எழுதப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்களும், ஆய்வாளர்களும் கருதுகின்றார்கள்.

மகாவம்சம் என்பது கி.பி 3ம் ஆண்டளவில் இலங்கையில் பௌத்தம் தோன்றி நிலைபெற்றப் பின்னர், தேவநம்பியதீசனால் கட்டப்பட்ட மகாவிகாரையில் இந்தியாவில் இருந்து வருகைத் தந்த பௌத்தப் பிக்குகளும், அப்போதைய அனுராதபுர இராசதானியப் பௌத்தப் பிக்குகளும், ஏனைய விகாரைகளில் இருந்த பௌத்தப் பிக்குகளும், பௌத்தம் இந்தியாவில் தோன்றி பரவிய வரலாற்றையும், அது இலங்கைக்கு அறிமுகஞ்செய்யப்பட்டு நிலைபெற்ற வரலாற்றையும், கூடவே புத்தரையும், பௌத்த மதத்தையும், பௌத்தம் தோன்றி வளர்ந்த வட இந்தியாவுடன் இலங்கையை தொடர்புபடுத்தியும்,  மக்களிடையே பரவிய அல்லது பரப்பப்பட்ட செவிவழி கதைகள் அட்டக்கத்தா எனும் பெயரில், பௌத்தத்துடன் வருகைத் தந்த வட இந்திய மொழியான பாளி (பிராகிருதம்) மொழியில் செய்யுள் வடிவில் பாடப்பட்டு வந்தன.  அவை ஒருகட்டத்தில் காலவரிசையாக ஒருங்கிணைக்கப்பட்டு அட்டகத்தா-மகாவம்சம் எனும் பெயரில் தொகுக்கப்பட்டது.

அந்த அட்டகத்தா-மகாவம்ச செய்யுள்களை ஆதாரமாகக் கொண்டு இரண்டு பழம்பெரும் நூல்கள் தொகுப்பாக்கம் பெற்றன. கி.பி. 4ம் நூற்றாண்டில் தீபவம்சமும், கி.பி. 6ம் நூற்றாண்டில் மகாவம்சமுமாகும். இதில் மகாவம்சம் நூலை தொகுத்தவர் மகாநாம தேரோ எனும் பௌத்தப் பிக்குவாவார். அவரும் அத்தொகுப்பு நூலை பாளி  மொழியிலேயே தொகுத்தார். எனவே மகாவம்சம் நூலின் உரிமையாளர் மகாநாம தேரோ என அறிய முடிகிறது.

அத்துடன் கி.மு 543ம் ஆண்டு இந்தியாவில் இருந்து விஜயன் எனும் ஒரு இளவரசன் வந்தான் என்பது முதல், கி.பி 361ம் ஆண்டு மகாசேனன் என்பவன் ஆட்சி செய்தான் என்பது வரை இலங்கையின் வரலாற்று குறிப்புகளையும் காலவரிசையாக மகாவம்சம் விவரிக்கின்றது.

மகாவம்சத்தை இலங்கையில் விஜயன் துவக்கி, அவனுக்குப் பிறகு அவனது வாரிசுகள் அந்த நாட்டை நீண்ட காலத்திற்கு ஆண்டு வந்திருக்கிறார்கள். விஜயன் தமிழ் மன்னனான பாண்டியன் மகளை மணந்து வம்சத்தைத் துவக்குகிறான். இவ்வாறு வட இந்திய மன்னனுக்கும் தென்னிந்திய மன்னனுக்கும் மணவினை ஏற்பட்டு அதில் உருவாகிய வாரிசுகளே சிங்களவர் என்ற பெயரில் இலங்கையை ஆண்டதாக வரலாறு கூறுகிறது.
மகாவம்சம் மறைமுகமாகத் தருகின்ற மற்றைய முக்கியமான செய்தி, இலங்கைத் தீவு சிங்கள மக்களது மட்டுமல்ல, தமிழ் மக்களது பாரம்பரிய பூமியும் கூட என்பதுதான்.

மகாவம்சம் 5 ஆம் நூற்றாண்டில் மகாநாம என்ற பௌத்த  தேரோவால் பாளி மொழியில் எழுதப்பட்ட இதிகாசம் ஆகும். மகாவம்சம்   என்றால் "பெருங்குடியினர்" என்பது பொருளாகும். இது   இலங்கைபற்றிய செவிவழிக் கதையோடு தொடங்கி மகாசேனன் ஆட்சியோடு (கி.பி. 334 - 362) முடிவுறுகிறது. இலங்கைத் தீவிற்குப் பௌத்த சமயம் வந்த வரலாறு குறித்தும் இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களது வரலாறு குறித்தும் மகாவம்சம் விபரிக்கின்றது. பௌத்தத்துக்குரிய அந்தஸ்தை மீண்டும் நிலைநாட்ட தமிழருக்கு எதிராக  துட்டகைமுனுவும் மகாசேனனும் வர்ணிக்கப்படுகிறார்கள்.  மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயம் புத்தரின் மூன்று இலங்கை வருகையை விபரிக்கின்றது.

இதன் இரண்டாவது பாகம் சூழவம்சம் எனப் பெயர் பெறும். இதன் முதல் பிரிவு 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்மகீர்த்தி என்ற பௌத்ததேரோவால் எழுதப்பட்டது. மகாவம்சத்தின் கதைநாயகன் துட்டன் கைமுனு என்றால் (கி.மு. 101-77) சூழவம்சத்தின் கதைநாயகன் தாதுசேனன் ஆவான். (கி.பி. 1137-1186).

இலங்கைத் தீவிற்குப் பவுத்த சமயம் வந்த வரலாறு குறித்தும் இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களது வரலாறு குறித்தும் மகாவம்சம் விபரிக்கின்றது. பவுத்தத்துக்குரிய தகைமையை மீண்டும் நிலைநாட்ட தமிழருக்கு எதிராக துட்ட கைமுனு போர்புரிந்து எல்லாள மன்னனைத் தோற்கடித்தான் என மகாவம்சம் கூறுகிறது. மகாவம்சத்தின் கதை நாயகனாக துட்ட கைமுனு (கிமு 101 - 77) வருணிக்கப்படுகிறான்.

மகாவம்சத்துக்கு முந்திய தீபவம்சம் துட்ட கைமுனுவின் ஆட்சியை பத்துப் பாடல்களில் பாடி முடிக்க, மகாவம்சம் அதே கதையை 12 அத்தியாயங்கள் (21-32) மகாநாம தேரர் பாடி முடிக்கிறார்.  அதாவது  மகா வம்சத்தின் 3/1 பாகம் துட்டகைமுனுவின் வீர வரலாறு கூறப்படுகிறது. துட்ட கைமுனு தமிழர்களைத் தோற்கடித்த ஒரு தேசிய விடுதலை வீரனாக வருணிக்கப் படுகிறான்.

கி.மு 247-207 வரை இலங்கையை ஆட்சி செய்த தேவநம்பிய தீசன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டே ஆட்சி செய்தான். அவனது ஆட்சி காலத்திலேயே பௌத்தம் இலங்கையில் அறிமுகமானது. அவனால் பௌத்த பிக்குகளுக்காக ஒரு மகாவிகாரை நிறுவப்பட்டது. அந்த மகாவிகாரையில் இருந்த பௌத்த பிக்குகளும் ஏனைய விகாரைகளில் இருந்த பிக்குகளும்; பௌத்தத்தின் தோற்றம், இலங்கையில் பௌத்தத்தின் வளர்ச்சி, பௌத்ததிற்கு ஆதரவளித்த அரசர்கள், மற்றும் அவர்கள் பௌத்த மதத்திற்கு ஆற்றிய பணிகள் போன்ற தகவல்களை காலவரிசையாக செய்யுள் வடிவில் ஏட்டுச்சுவடிகளில் குறித்தும், அவற்றை வாய்மொழியாக பேசியும் வந்துள்ளனர். அவை அட்டகத்தா என்றழைக்கப்பட்டது.

பின்னர் இவ்வாறு பல்வேறு விகாரைகளில் இருந்த ஏட்டுச்சுவடிகளை (அட்டகத்தாக்களை) மகாவிகாரையில் இருந்த பௌத்தப்பிக்குகள் ஒருங்கிணைத்து அதனை அட்டகத்தா மகாவம்சம் என அழைக்கலாயினர். இந்த அட்டகத்தா மகாவம்சத்தை மூலமாகக் கொண்டே கி.பி 4ம் நூற்றாண்டளவில் தீபவம்சமும், கி.பி. 6ம் நூற்றாண்டளவில் மகாவம்சமும் தொகுக்கப் பட்டுள்ளன.

தீபவம்சம்

மகாவம்சம் அட்டகத்தாக்களை மூலமாகக்கொண்டு ஒருங்கிணைத்தே தீபவம்சம் 4ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டுள்ளது என்றாலும், அதன் காலம் குறித்து அறுதியிட்டு கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் தீபவம்சம் 4ம் நூற்றாண்டளவில் முற்றுப்பெற்றிருக்க வேண்டும் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்த தீபவம்சம் யாரால் தொகுக்கப்பட்டது எனும் தகவல்கள் இல்லை. அதனால் அதன் ஆசிரியர் யார் என்றும் கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் இந்த தீபவம்சத்தை மூலமாகக் கொண்டே மகாவம்சம் உருவாகியுள்ளதாக வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். தீபவம்சத்தில் 37 பகுதிகள் இருப்பது போன்றே, மகாவம்சமும் 37 பகுதிகளைக் கொண்டுள்ளன. அதேவேளை மகாவம்சத்தில் காணப்படும் "விஜயனின் வருகையுடன் தொடர்புடைய குவேனி பாத்திரம்" தீபவம்சத்தில் இல்லை என்பதை கலாநிதி க. குணராசா தனது மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தீபவம்சம் என்ற நூல் குறித்து, வெளியில் அறிந்தவர்கள் குறைவு. தீபவம்சத்தில் எழுதப் பட்ட சரித்திரக் குறிப்புகள், மகாவம்சத்தில் பிரதி செய்யப்பட்டுள்ளன. மகாவாம்சம் எழுதிய  மகாநாம தேரோ, அந்தக் காலத்திய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப எழுதியுள்ளார். அவரது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, துட்டகைமுனு அரசனை நாயகனாக சித்தரிக்கின்றார். மகாவம்சத்தில் வேறெந்த அரசனுக்கும் கொடுக்கப்படாத முக்கியத்துவம், துட்ட கைமுனுவுக்கு கிடைத்துள்ளது. மகாவம்சத்தின் மூன்றில் ஒரு பாகம் துட்ட கைமுனு மன்னனின் சரித்திரத்தைக் கூறுவதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது.

இலங்கையில் துட்டகைமுனு என்ற மன்னன் வாழ்ந்த காலம் கி.மு. 161 - 137. இதற்கும் மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற்கும் இடையிலான  சுமார் 500 ஆண்டுகள், இலங்கைத் தீவில் பல்வேறு அரசியல்/பொருளாதார/சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். நமது காலத்தில் சில சரித்திர நாயகர்களை போற்றி, அவர்களைப் பற்றிய இலக்கியங்களைப் படைப்பது போன்று தான், மகாவம்ச காலத்திலும் நடந்திருக்கும். மகாவம்சம் எழுதப் பட்ட காலத்தில் இடம்பெற்ற, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இலங்கையின் தலைவிதி, அந்தக் காலத்திலும் இந்தியாவில் நடக்கும் மாற்றங்களுடன் பின்னிப் பிணைந்திருந்தது.

மகாநாம தேரோவின் மகாவம்சம்

தீபவம்சத்தை தழுவியே மகாநாம தேரோ எனும் பௌத்த பிக்குவினால் மகாவம்சம் தொகுக்கப்பட்டுள்ளதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். அதேவேளை மகாவம்சம் நூல்  தீபவம்சம்  நூலையும் விட எளிதாக புரிந்துக்கொள்ளும் வகையில் காலவரிசைப்படி செய்யுள்களாக தொகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  மகாவம்சம் 6ம் நூற்றாண்டளவில் தொகுக்கப்பட்டதாக கருதப்படுகின்றது.

மகாவம்சம் (Mahawamsa or Mahawansa) என்பது இலங்கை வரலாற்று தகவல்களை உள்ளடக்கி, அதேவேளை பௌத்த மதத்தை முதன்மைப் படுத்தி பௌத்த பிக்குகளினால் பாளி மொழியில் ஏட்டுச்சுவடிகளில் செய்யுள் வடிவில் காலவரிசையாக குறித்து வைப்பட்டவற்றை மூலமாகக்கொண்டு, தொகுக்கப்பட்ட இலங்கையின் பழமையான தொகுப்பு நூலாகும். இது   இதற்கு முந்திய தொகுப்பு நூலான தீபவம்சம் எனும் நூலை தழுவி தொகுக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். 

இந்த நூல் கி.பி 6ம் நூற்றாண்டளவில், பாளி மொழியில், மகாநாம தேரோ எனும் பௌத்த பிக்குவினால் தொகுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதனடிப்படையில் மகாவம்சம் நூலின் உரிமையாளர் மகாநாம தேரோ ஆகும். இதனை இலங்கையின் வரலாற்று ஆவணமாக சிங்கள பௌத்த பெரும்பாண்மை மக்கள் கூறிவந்தாலும், முழுமையான ஒரு வரலாற்று ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனும் கருத்து வரலாற்றாசிரியர்களிடையே உள்ளன. அதேவேளை இலங்கையில் வரலாற்று குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றிருப்பதனால், மகாவம்சம் நூலைத் தவிர்த்துவிட்டு  இலங்கையில் வரலாற்றை ஆய்வுசெய்ய முடியாது எனும் கருத்தும் வரலாற்றாசிரியர்களிடையே  உள்ளன.

மகாவம்சம் பௌத்த சிந்தனைகளுடன், பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி, தற்கால அறிவியலுடன் ஒப்பிட்டு ஏற்றுக்கொள்ள முடியாத கற்பனைகள், கட்டுக்கதைகள், தொன்மங்கள் போன்றவற்றையும் கொண்டுள்ள போதும்; பௌத்தத்தின் வரலாறு, இலங்கையில் பௌத்தம் தோன்றி நிலைப்பெற்றதன் காலவரிசை, பௌத்ததிற்கு மன்னர்கள் ஆற்றிய பணிகள் போன்றவற்றை முதன்மைப் படுத்தி, பௌத்ததிற்கு ஆதரவளித்த அரசர்களை ஆதரித்து, இலங்கையில் பௌத்தம் தோன்றுவதற்கு முன்னர் கி.மு. 6ம் நூற்றாண்டு வரையான நம்பகமற்ற தொன்மக் கதைகளை உள்ளடக்கி, இலங்கையின் முதல் மன்னனான விஜயன் முதல், கி.பி. 4ம் நூற்றாண்டு ஆட்சி செய்த மகாசேனன் வரையான வரலாற்றையும் கொண்டுள்ளது.

இதனால் இலங்கையின் வரலாற்றை ஆய்வுசெய்ய முற்படும் வரலாற்றாசிரியர்களுக்கும், பௌத்தமத வரலாற்றை அறிய முற்படும் வரலாற்றாசிரியர்களுக்கும் மகாவம்சம் எனும் நூலை மீளாய்வு செய்தல் அவசியமாகின்றது. அதேவேளை இலங்கையின் வரலாற்றை அறிய முற்படும் எவருக்கும் மகாவம்சம் குறித்த போதிய தெளிவு இருத்தலும் முக்கியமாகின்றது. மகாவம்சம் இலங்கையின் பௌத்த பிக்குகளால், பௌத்தம் சார்ந்து தொகுக்கப்பட்ட நூல் என்பதால், அது இலங்கை பௌத்த சிங்களவருக்கு ஆதரவான நிலையிலேயே தொகுக்கப்பட்டிருக்கிறது என்றாலும், தமிழரின் வரலாற்று தொன்மைப் பற்றிய எழுத்தாவணங்கள் அற்ற நிலையில், அவற்றை ஓரளவுக்கு என்றாலும் அறிந்துகொள்ள மகாவம்சம் நூலே உதவுகின்றது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில் ஒரு வைகாசி மாதத்துப் பவுர்ணமி நாளில் கவுதம புத்தர் (கிமு 560–480) அமர்ந்திருந்த போது அவருக்குச் சில நிகழ்ச்சிகள் புலனாகின்றன. பவுத்த மதம் பெரு வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கைத் தீவு என்பதும், இலங்கையின் பூர்வக் குடிமக்களான இயக்கர்களை அங்கிருந்து அகற்றி, இலங்கையில் பௌத்த மதத்தை தோற்றுவித்து புனிதப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் புத்தருக்கு புலனாகுகிறது என்ற கற்பனைக் கருத்துருவாக்கத்தில் இருந்து தொடங்குகிறது. இப்படியான கற்பனை கருத்துருவாக்கங்கள் மகாவம்சத்தில் நிறையவே உள்ளன. இவ்வாறான கருத்துருவாக்கங்களே இலங்கை தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது  என்ற எண்ணக்கரு சிங்கள மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து போயுள்ளது.

மகாநாமதேரோவால்  பாளி மொழியில் தொகுக்கப்பட்ட மகாவம்சம் நூலினை மூலமாகக் கொண்டு, ஆங்கில மொழியில் 1837ம் ஆண்டு முதல் அச்சுப் பதிப்பு வெளியிடப்பட்டது. இந்த அச்சுப்பதிப்பு இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தகாலத்தில் இருந்த சிலோன் சமூக பணியகம் எனும் பணியகத்தில் பணிப்புரிந்த பணியாளரும் வரலாற்றாசிரியரும் ஆன ஜோர்ஜ் டேனர் என்பவர் வெளியிட்டார். அதன்பின்னர் 1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் என்பவர், மாபெல் ஹெய்னஸ் போட் என்பவரின் உதவியுடன் ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்ப்பு ஒன்றை செய்தார். வில்ஹெய்ம் கெய்கர்  இதற்கு முன்னதாகவே பாளி மூலத்தில் இருந்து ஜெர்மன் மொழிக்கு மொழிப்பெயப்பு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாவம்சம் என்ற நூல் எதனைச் சொல்கின்றது,  அது எப்போது எவரால் எழுதப்பட்டது, அதற்கு ஆதாரமாக அமைந்துள்ளவை எவை?

இலங்கைத் தீவின் வரலாற்றை விபரிக்கின்ற வரலாற்று நூல் ஆவணங்களில், முதன்மையாகத் திகழ்வது மகாவம்சம் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், மகாவம்சம் இலங்கை வரலாற்றினைச் சிலஇடங்களில் நம்பகத் தன்மையோடும், பலஇடங்களில் நம்பகமற்றதாகவும் விபரிக்கின்றது.

மகாவம்சம் பாளி மொழியில், செய்யுள் வடிவில் பாடப்பட்டிருக்கின்றது. இலங்கைத் தீவிற்குப்; பௌத்த சமயம் வந்த வரலாறு குறித்தும், இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களது வரலாறு குறித்தும் மகாவம்சம் விபரிக்கின்றது. மகாவம்சம் விபரிக்கின்ற மூலக்கதைகளைக் கூறாமலேயே, மகாவம்சம் கூறுகின்ற இலங்கை வரலாற்றை அறிய முடியும். சிங்கள இனத்திற்கு அவமானம் தருகிற சம்பவங்கள் என்று கருதி, பலர் சில மூலக் கதைகளைத் தவிர்த்தும், புதுக்கியும், திரித்தும் கூட எழுத ஆரம்பித்திருக்கின்றார்கள்.

இலங்கையில் பௌத்த மதம் பரவி  நிலை பெற்ற காலத்தில் பௌத்த விகாரைகளில் வாழ்ந்து வந்த பௌத்த பிக்குகள் சமய மரபுகள் குறித்தும், மன்னர்களின் வரலாற்றுக் கதைகள், அவர்களது பணிகள் குறித்தும் ஏடுகளில் எழுதியதோடு மட்டுமல்லாது, வாய்மொழி மூலமாகவும் பேசி வந்தார்கள். இவை காலம் காலமாகப்  பாதுகாக்கப்பட்டு வந்ததோடு, “அட்டகத்தா” (எட்டு கதைகள்) என்று அழைக்கப்பட்டும் வந்தன. இவ்வாறு பல்வேறு பௌத்த விகாரைகளில் பாதுகாக்கப்பட்டு வந்த  அட்டகத்தாக்கள் ஒரு கட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு ‘அட்டகத்தா-மகாவம்சம்’என்று அழைக்கப்படலானது.
அட்டகத்தா ஏட்டுப்பிரதிகளைத் தழுவிப்  தீபவம்சம் என்ற நூலும் எழுதப்பட்டது.

கிறிஸ்துவுக்குப் பின் நான்காம் நூற்றாண்டளவில் தீபவம்சம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றார்கள். தீபவம்சத்தின் ஆசிரியர் யார் என்று அறுதியிட்டு கூறமுடியாமல் உள்ளது. காலத்திற்குக் காலம் பல பௌத்த பிக்குகளால் எழுதப்பட்ட செய்யுள்களை ஒருங்கிணைத்துத்தான் ‘தீபவம்சம்’முழுமை பெற்றது.
இந்தத் தீபவம்சம் என்கின்ற நூலில் இருந்துதான், தற்போதைய மகாவம்சம் என்கின்ற நூல் உருவாகியுள்ளது. தீபவம்சத்தை மீள் ஒழுங்கு செய்ததுதான்  மகாவம்சம். இன்னொரு வகையில் தீபவம்சம் என்கின்ற நூலின் மிகத்திருத்தமான  வடிவமே மகாவம்சம்.

இவ்வாறு பல பௌத்த பிக்குகள் காலம் காலமாக, ஏடுகள் ஊடாகவும், வாய்மொழி ஊடாகவும பாதுகாத்து வந்த செய்யுள்கள் ‘அட்டகத்தா’ என்றும், பின்னர் தீபவம்சம் என்றும் அதன் பின்னர் ‘ அட்டகத்தா-மகாவம்சம்’ என்றும், ஈற்றில் ‘மகாவம்சம்’ என்றும் ஒருங்கிணைக்கப்பட்டு மீள் ஒழுங்கு செய்யப்பட்டன. மீள் ஒழுங்கைச் செய்து மகாவம்சத்தை உருவாக்கியவர் மகாநாம தேரோ என்று சில ஆய்வாளர்கள் கருதுவார்கள். மகாநாம தேரோ தான் மகாவம்சத்தின் மூல ஆசிரியர் எனக் கொள்ளக் கூடிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கருதுகின்ற ஆய்வாளர்களும் உண்டு.
இதுவே ‘மகாவம்சம்’ என்கின்ற வரலாற்று நூல் உருவான வரலாறு ஆகும்.!

மூலநூலான தீபவம்சத்தில் 37 அத்தியாயங்கள் உள்ளன. அதேபோல மகாவம்சத்தில் முதலில் 37 அத்தியாயங்கள் அடங்கியுள்ளன. அத்தோடு மேலும் 63 அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டு நூறு அத்தியாயங்கள் மகாவம்சத்தில் தற்போது உள்ளன. 38ம் அத்தியாயத்தில் இருந்து 100 வது வரையிலான அத்தியாயங்கள் ‘சூளவம்சம்’ என்ற தொடர் நூலில் உள்ளவையாகும். இவற்றைப் பாளி மொழியில் இருந்து, ஜேர்மன் மொழிக்கு, மொழி பெயர்ப்புச் செய்த வில்லியம் கெய்கர், முதல் 37 அத்தியாயங்களை, ‘மகாவம்சம்’ என்ற தலைப்பில், மொழி பெயர்த்தார். மீதி 100 வரையிலான அத்தியாயங்களை  சூளவம்சம் தொகுதி ஒன்று  சூளவம்சம் தொகுதி இரண்டு என்று மொழி பெயர்த்தார். பின்னாளில், அதாவது 1889ல், முதலியார் எல்.சி விஜயசிங்க என்பவர், ஜோர்ஜ் ரேனர் என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பை மீளாய்வு செய்து மறுபதிப்பாக வெளியிட்டார். ஆனால் முதலியார் விஜயசிங்க ஒரு மாறுதலை, தலைப்புகளின் பெயரில் கொண்டு வந்தார். சூளவம்சம் கூறுகின்ற 38 முதல் 100 வரையிலான அத்தியாயங்களுக்கு ‘மகாவம்சம் தொகுதி இரண்டு’ என்று பெயரிட்டார். முதலியார் விஜயசிங்கவின் கருத்துப்படி நூறு அத்தியாயங்களும் மகாவம்சம் என்ற பொதுப் பெயருக்குள்ளேயே அடக்கமாகி விட்டன.

ஆனால் இங்கே ஓர் உண்மையையும் சுட்டிக்காட்ட வேண்டும். பாளி மொழியில் இருந்து மகாவம்சத்தை ஜேர்மன் மொழிக்கு, மொழி பெயர்த்த வில்லியம் கெய்கர், அதனை ஜேர்மன் மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு மொழி பெயர்த்தது 1912ம் ஆண்டில்தான். அதற்கு முன்னரேயே பாளி மொழியிலிருந்து நேரடியாக ஆங்கிலத்திற்கு ‘மகாவம்ச  என்ற பெயரில் 1837ல் ஜோர்;ஜ்; ரேனர் மொழி பெயர்ப்பு செய்ததையும், அதனைத்தான் முதலியார் விஜயசிங்க மீளாய்வு செய்தார்.

தற்போதைய மகாவம்சத்தில், நூறு அத்தியாயங்கள் (பிற்சேர்க்கையாக) சேர்க்கப்பட்டுள்ள போதிலும், முதல் 37 அத்தியாயங்களும் என்ன சொல்கின்றன? அவை தெரிவிக்கும் கருத்துக்கள் என்ன? அவற்றில் மறைந்திருக்கும் உண்மைகள் என்ன?
மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயம் புத்தரின் மூன்று இலங்கை வருகைகளை விபரிக்கின்றது. மகாவம்சத்தின்படி, மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில், ஒரு வைகாசி மாதத்துப் பௌர்ணமி நாளில் கௌதம புத்தர் அமர்ந்திருக்கின்றார். அப்போது அவருக்குச் சில விடயங்கள் புலனாகின்றன. பௌத்த மதம் பெரு வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கை என்பதும், ஆனால் அங்கு ஏற்கனவே வசித்து வருகின்ற இயக்கர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் புத்தர் எண்ணுகின்றார்.

மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயத்தின்  குறிப்புகளின்படி இலங்கைத்தீவின் ஆதிக்குடிகள் இயக்கர்கள் என்பது புலனாகின்றது. மகாவம்சத்தின்படி, இலங்கைத்தீவில் வாழ்ந்த இயக்கர்கள், குறிப்பிட்ட ஒரு தினத்தில், மகாவலி கங்கை அருகே வந்து கூடுவது வழக்கம். அந்த வேளையில், புத்தர் அங்கே பிரசன்னமாகிப் பயங்கரமான சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்துகின்றார். உடனே இயக்கர்கள் “இந்த இலங்கைத்தீவு முழுவதையுமே உமக்குத் தருகின்றோம். எங்களை காப்பாற்றுங்கள்” என்று கெஞ்ச, புத்தர் அவர்களை, மலைநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றார்.

இயக்கர்கள் அகன்றதும், அந்த இடத்தில் ‘தேவர்கள்’ கூடுகின்றார்கள்.  அப்போது அந்த சபையில் புத்தர் தமது சமயக் கொள்கையைப் போதித்தார். பெரும் திரளான மக்கள் அப்போது பவுத்த மதத்துக்கு மாறினர்.

இந்தத் தேவர்கள் என்பவர்கள் யார்? 
 பின்னாளில் விஜயன் வருவதற்கு முன்னரேயே ஊடுருவி இருந்த ஆரியர்கள் என்பவர்கள்தான் இந்தத் ‘தேவர்கள்.

இந்தியாவிற்குள், கைபர் மற்றும் போலன் போன்ற இமயமலைக் கணவாய்கள் ஊடாக, கிறிஸ்துவுக்கு முன்னர், 2500க்கும் (கிறிஸ்துவுக்கு முன்னர்) 1500க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், ஆரியர்கள் ஊடுருவி விட்டார்கள்.

இந்தியத் திராவிட மக்களைத் தென்புலமாக நகர வைத்ததுடன், விஜயனின் வருகைக்கு முன்னரேயே, இலங்கையின் தென் புலங்களில் ஆரியர்கள் குடியேறினர். ஆனால் கிறிஸ்துவுக்கு முன்னர் 483ம் ஆண்டில், விஜயனின் வருகையோடுதான், ஆரியரின் வருகை ஆரம்பமானது என்று சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் என்னுகிறார்கள்.

மகாவம்சத்தின்படி, புத்தர் இரண்டாம் முறையும், இலங்கைக்கு வருகின்றார். இம்முறை இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்காக வருகின்றார். முன்பு சூறைக்காற்றை உருவாக்கி ஆதிக்குடிகளைப் பயப்படுத்திய புத்தர், இம்முறை பயங்கர இருளைப் பரவச்செய்து, நாக மன்னர்களையும், அவரது வீரர்களையும் பயங்கொள்ள வைக்கின்றார். பின்னர் அங்கு வாழ்ந்த  நாகர்களுக்கு, ‘புத்தம்- தர்மம் -சங்கம்’ என்ற போதனைகளை அளிக்கின்றார்.

இது நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், மகாவம்சத்தின்படி, புத்தர் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார். கல்யாணி என்ற தேசத்தின், நாக மன்னனின் வேண்டுதலை ஏற்று அங்கே செல்வதோடு, பல இடங்களுக்கும் சென்று, அந்த இடங்களை ஆசிர்வதித்துத் திரும்புகின்றார்.

இந்தச் செய்திகளின் படி இலங்கையின் ஆதிக்குடிவாசிகளாக இயக்கர்களும், நாகர்களும் இருந்துள்ளார்கள். இயக்கர்களை அகற்றியது போல், புத்தரால் நாகர்களை அகற்ற முடியவில்லை. நாக வழிபாடும், ‘நாக’ என்ற சொல் வரும் பெயர்களும், (எடுத்துக்காட்டாக நாகநாதன், நாகலிங்கம், நாகமுத்து, நாகபூசணி), மற்றும் இலங்கையின் வடபெரும் பகுதி நாகதீபம் என அழைக்கப்பட்டதும், பல வரலாற்று உண்மைகளை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றன.

மகாவம்சத்தின் இரண்டாவது அத்தியாயம், புத்தரின் மூதாதைகள் குறித்தும், மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது அத்தியாயங்கள் புத்த மத மகாநாடுகள் குறித்தும், ஆறாவது அத்தியாயம் விஜயனின் கதை குறித்தும், ஏழாவது அத்தியாயம் இலங்கைத்தீவில் விஜயன் கரை இறங்குவது குறித்தும் விபரிக்கின்றன. மிகுதி அத்தியாயங்கள் யாவும், சிங்கள மன்னர்கள் பற்றியும், அவர்களது ஆட்சி முறைகள் பற்றியும், தமிழ் மன்னர்களுக்கும் சிங்கள மன்னர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போர்கள் குறித்தும் விபரிக்கின்றன.

37 அத்தியாயங்களைக் கொண்ட மகாவம்சத்தில்
1-5 வரையான பகுதி இலங்கையில் புத்தரின் விஜயம், இந்தியாவில் பெளத்தத்தின் தோற்றம், வளர்ச்சி என்பவற்றைக் கூறுகிறது.

6-10 வரையான பகுதி தேவ நம்பிய தீசனுக்கு முற்பட்ட கால வரலாற்றைக் கூறுகிறது, இலங்கையில் ஆரியரின் குடியேற்றம், பண்டுகாபயனது ஆட்சி, அனுராதபுரம் தலை நகராக்கப் பட்டமை போன்ற செய்திகள் இவற்றில் அடங்கியுள்ளன.

11-20 ல் தேவநம்பிய தீசனின் ஆட்சிக்காலம், மஹிந்த தேரோவால் இலங்கைக்குப் பெளத்தம் அறிமுகப் படுத்தப்பட்டமை கூறப் படுகிறது,

21-32 வரையான அத்தியாயங்கள் அதாவது மஹா வம்சத்தின் 3/1 பாகம் துட்டகைமுனுவின் வீர வரலாறு கூறப் படுகிறது. இதில் ஒரு தேசிய விடுதலை வீரனாக துட்டகைமுனு வர்ணிக்கப் படுகிறான். 

அடுத்துள்ள 6 அத்தியாயங்களில் மன்னர்களின் அரசியல் வரலாறு கூறப் படுகிறது.

விஜயனின் கதை என்பது ஒரு கட்டுக்கதையாகவும், நாடோடிக் கதைகளின் திரிபாகவும் உள்ளது என்பதை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். விஜயனின் முதல் மனைவியான குவேனி பற்றிய குறிப்புக்கள் எதுவும், மகாவம்சத்திற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட தீபவம்சத்தில் இல்லை. தவிரவும், பின்னாளில் அரசகுலப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணப்பதற்காக, மதுரையில் அரசாண்ட பாண்டிய மன்னனின் மகளையும், பாண்டிய மன்னனின் அரசப் பிரதானிகளின் பெண் மக்களான எழுநூறு பேரையும் தேர்ந்தெடுத்து, விஜயனும் அவனது எழுநூறு தோழர்களும்  மணம் புரிந்தார்கள் என்று மகாவம்சம் சொல்கின்றது.

விஜயனும் அவனது தோழர்களும் மணந்த பெண்கள், பாண்டிய மகளிர்கள் என்பதனால், சிங்கள இரத்தத்துடன் பாண்டிய நாட்டுத் திராவிட இரத்தமும் சேர்ந்து, சிங்கள வம்சம் ஒரு கலப்பு வம்சமாக உருவாகி விட்டது என்ற தர்க்கமும் எழுகிறது . இதனை சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் சிலர், பாண்டிய மதுரையை, ‘பாண்டு மதுராவாக்கி’, மகாபாரத பாண்டவர் குலத்தில் தொடர்பு தேடி வருகின்றார்கள். ஆனால் மகாவம்சத்தின் கெய்கரின் மொழி பெயர்ப்பிலும், முதலியார் விஜயசிங்கவின் மீளாய்விலும் ‘தெற்கேயுள்ள மதுரை’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாவம்சம் குறிப்பிடுகின்ற மற்றைய முக்கிய அம்சங்களில், காமினி அபயன் என்கின்ற  துட்ட காமினியும், எல்லாளன் என்கின்ற தமிழ் மன்னனும் அடங்குவர்.  துட்ட காமினியைத் தனது பாட்டுடைத் தலைவனாகத்தான் மகாவம்சம் விபரிக்கின்றது.  அவனது வரலாற்றை விபரிக்கும்போது, இரண்டு அம்சங்களை மகாவம்சம் வலியுறுத்துகின்றது.  ஒன்று தமிழர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள். மற்றது பௌத்த மதத்திற்கு அவன் ஆற்றிய சேவை.

துட்ட காமினி எல்லாளனுக்கு எதிரான யுத்தத்திற்கு,  புத்த மதத்தை முன்வைத்தான். நான் அரச போகங்களுக்காக  இந்த யுத்தத்தில் இறங்கவில்லை. பௌத்த சாசனத்தின்  உன்னதத்திற்காகவே  போர் தொடுக்கின்றேன் என்ற கோசத்தைத்  துட்ட காமினி முன் வைத்தான்.

கிறிஸ்துவுக்கு முன்னர் 145ம் ஆண்டு தொடக்கம் கிறிஸ்துவுக்கு முன்னர் 101ம் ஆண்டு வரையிலான 44 ஆண்டுகள், தமிழ் மன்னனான எல்லாளன் ஆட்சி செய்த காலமாகும். எல்லாளனைச் சோழ இளவரசனாகவும், தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்தவனுமாகவும், பாளி இலக்கியங்கள் கூறுகின்றன.  இப்படியொரு சோழன் இந்தியாவில் இருந்ததாக, தமிழ் நாட்டு வரலாற்றில் எந்த ஆதாரமுமில்லை. இவனது நீதி தவறாத ஆட்சி குறித்துப் பல இடங்களில் மகாவம்சமும் கூறுகின்றது. இளைஞனான துட்டகாமினியுடன், 72 ஆண்டுகள் வயது  நிரம்பிய எல்லாளன் தனிச் சமர் செய்து இறந்ததன் காரணமாக எல்லாளனின் தோல்வி, தமிழ் மக்களின் தோல்வியாயிற்று.

மகாவம்சத்தின் ஊடாக மேலும் சில விடயங்கள் தெரிய வருகி;ன்றன. அனுராதபுர  சிம்மாசனத்தில் அமர்ந்து சிங்களவரும், தமிழரும் மாறி மாறி இலங்கையை ஆட்சி புரிந்துள்ளார்கள்.  மகாவம்சத்தின்படி, இந்த நாட்டைத் தமிழ் மன்னர்களும், சிங்கள மன்னர்களும் மாறி மாறி ஆளும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். இயக்கர்கள், ஆரியர்கள், தமிழர்கள் என்போரின் கலப்பு மக்களாகச் சிங்கள மக்கள் உள்ளார்கள். எல்லாள தமிழ் மன்னன் இறந்த 57 ஆண்டுகளுக்குப் பின்னர், அனுராதபுரத்தை ஐந்து தமிழ் மன்னர்கள் ஆண்டுள்ளார்கள். மகாவம்சத்தின்படி, சிங்கள மன்னர்களால் பல சைவக்கோவில்களும், சைவச் சின்னங்களும்; அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் பௌத்த தூபிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரேயே அங்கே ஆதிக்குடிகளான இயக்கர், நாகர் என்போர் வாழ்ந்து வந்துள்ளார்கள். இவை மகாவம்சம் தந்துள்ள செய்திகளாகும்.

இலங்கைக்கு பெளத்தம் கி.மு.3 ஆம் நூற்றாண்டளவில் அறிமுகப் படுத்தப் பட்டமைக்குச் சாசன ஆதாரங்கள் உள்ளன. இலங்கைக்குப் பெளத்தம் அறிமுகப் படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து இலங்கையில் நிலையாக நிலவி வந்த கலாசாரம் பெளத்தத்தைச் சார்ந்தோர், சாராதோர் என இரு பெரும் பிரிவுகளாக வளர்ச்சி பெற்றது.அதற்கு முன் இயற்கையின் சாராம்சங்களையும் இந்து கலாசாரங்களையும் உள்ளடக்கிய பெருமளவு நிறுவன மயப் படுத்தப்படாத வழிபாட்டு முறை நிலவியதாகக் கூறப்படுகிறது,

பெளத்தத்தின் வருகையோடு இணைந்து வந்த வட இந்திய பேச்சு மொழியாகிய பாளிப் பிராகிருதம் இலங்கையில் வழக்கிலிருந்த சிங்கள மொழியின் மூதாதை மொழியாகிய எலு மொழியுடன் இணைந்து ஆதிச் சிங்கள மொழி ஒன்றை உருவாக்கியது. பெளத்த மதத்தினைப் பின்பற்றுகின்ற மக்கள் அதனோடு இணைந்த வகையிலான மொழி வடிவத்தினைப் பின்பற்ற பெளத்த மதத்தினைச் சாராத ஏனையோர் திராவிட மொழி வடிவத்தினைப் பின்பற்றினர். அதனால் பெளத்த மதத்துடன் இணைந்து கொண்ட மொழி உருவாக்கமானது பெளத்தர் - பெளதரல்லாதோர் ஆகியோரை மொழி அடிப்படையிலும் வேறு படுத்தியது.

மதமும் மொழியும் இணைந்து சிங்கள பெளத்தரை உருவாக்கிய வேளையில் இலங்கை அரசியலில் வெளி நாட்டுக்காரணிகள் பல ஆதிக்கம் செலுத்த முற்படுவதினையும் காணலாம். பல்லவர் காலத்தில் (கி.பி.6ம் நூற்றாண்டளவில்) தென்னிந்தியாவில் ஏற்பட்ட இந்து சமய மறுமலர்ச்சியின் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டது. இதனால் இலங்கையில் பெளத்தர் பெளதரல்லாதோர் ஆகியோருக்கிடையே இருந்து வந்த இடைவெளி மேலும்  அதிகரித்தது.

இலங்கை அரசின் இறைமைக்கெதிரான தென்னிந்திய அரசியல் அச்சுறுத்தல்களும் பெளத்தரல்லாதோரான தமிழ் இந்துக்களின் தொகை வட இலங்கை, தென்னிந்தியக் கலாசார, வர்த்தக, வாணிபத் தொடர்புகளால் இலங்கையில் அதிகரித்துக் காணப் பட்டமையும் அவ்விடவெளியை மேலும் அகலப்படுத்தியது.

அத்துடன், தென்னிந்தியாவில் செல்வாக்குற்றிருந்த பெளத்தம் பலமிழந்து அவ்விடத்தில் மீண்டும் இந்து மதம் மேல்நிலையுற்றது.இவ்வரலாற்று நிகழ்வுகள் இலங்கையின் எதிர்காலத்தினைத் தீர்மானிக்கும் பொறுப்பை பிக்குகளின் கையில் ஒப்புவித்தது.இதனால் பெளத்தரல்லாதோரான - பெருமளவு வலிமையைக் கொண்டிருந்த தென்னிந்திய வட இலங்கைத் தமிழரிடமிருந்து சிங்கள மொழியையும் பெளத்த மதத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவைக்கு பெளத்த சங்கத்தினர் தள்ளப் பட்டனர். எனவே, மதமும் மொழியும் தென்னிந்தியப் பின்னணியும் இணைந்து பெளத்தர் - பெளதரல்லாதோர் வேறுபாட்டை வளர்த்ததோடு சிங்கள பெளத்த இனமொன்றையும் தமிழ் இந்துக்கள் இன்ற ஓர் இனத்தையும் உருவாக்கிற்று. அத்துடன் அது இரு வேறு பட்ட முனைப்பில் சென்று கொண்டும் இருந்தது.

இவ்விடத்தில் மொழியையும் மதத்தையும் ஆளுகின்ற நிறுவனம் என்ற வகையில் அரசு முக்கியம் பெற்றது. இக்காலத்தில் தென்னிந்தியச் சவால்களில் இருந்து பெளத்த மதத்தையும் மொழியையும் காக்கின்ற அரசனுக்கு முக்கியமாக பெளத்த சங்கத்தினர் ஆதரவு கொடுத்தனர். இதே வேளை தன் அரச அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கும் பெரும்பாண்மை மதத்தையும் மொழியையும் முதன்மைப் படுத்தி ஆதரவைப் பெற
 வேண்டிய நிலை அரசனுக்கு இருந்தது. எனவே அரசன் பெளத்த மதத்திற்குப் பெருமளவு ஆதரவளித்தான். பெளத்த குருமாரும் தம் மதத்தை ஆதரிக்கும் அரசனுக்குத் தம் ஆதரவை அளித்தனர். இவ்வாறு மதமும் அரசும் ஒன்றோடொன்று நெருங்கிய பிணைப்பைக் கொண்டிருந்தது.இதனால் மதத்தை அடிப்படையாகக் கொண்டு மொழி, இனம், அரசு என்பன இணைக்கப் பட்டன.

பெளத்தம் வட இந்தியாவில் மகத இராச்சியத்தில் வளர்க்கப் பட்டு  தென்னிந்தியாவினூடாகப் பரப்பப் பட்டு மகிந்ததேரோ மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப் பட்டது.   ஆரம்பத்தில் இது பிக்குப் பரம்பரையினரது செய்தியைகளையும் அவர்களின் மத நடவடிக்கைகளை எழுதி வைக்கும் முறைகளை மரபாகக் கொண்டிருந்தது. இதனால் பெளத்தத்தோடு தொடர்புடய நூல்களை அவர்கள் எழுதினர். ஆரம்பத்தில் பெளத்த போதனைகளும் புத்தரின் வரலாற்றுச் செய்திகளும் மத ஆச்சாரியர்களது செய்திகளும் இவர்களால் பாதுகாக்கப் பட்டு வந்தன. இவற்றுக்குக் கால அடிப்படையைக் கொடுக்கும் நோக்குடன் அவ்வவ் காலத்தில் அரசாண்ட மன்னர்களின் விபரங்கள் சேர்க்கப் பட்டன. மன்னர் ஒவ்வொருவரது ஆட்சிக்காலச் சம்பவங்கள் விகாரைகளுக்கு அவர்கள் அளித்த ஆதரவு போன்ற அம்சங்கள் அவற்றில் சிறப்பிடம் பெற்றன.

இம்மரபு காலப் போக்கில் புதிய பாதையில் வளரத்தொடங்கியது. அரச ஆதரவும் நேர அவகாசமும் கல்வி பயிலும் வாய்ப்பும் நூல்களை எழுதும் நாட்டமும் பெளத்தம் செல்வாக்குற்ற மதமாக எழுச்சி பெற்றதும், எல்லாவற்றுக்கும் மேலாக சமூகத்தை வழிநடத்தும் பொறுப்பு பிக்குகளின் கைக்கு இடம் மாறியமையும் பெளத்தம் புதிய பாதையில் வளரக் காரணமாயிற்று.இதனால் பெளத்த மதம் தொடர்பான செய்திகளோடு தமக்கு ஆதரவளித்த அரசர்களின் செய்திகளையும் அவர்களின் மத நட வடிக்கைகளையும் விரிவாக எழுதி  வைக்க ஆரம்பித்தனர். அவை விரிவாக இடம் பெற்ற காரணத்தால் காலப் போக்கில் அரசியல் வரலாற்றுப் பகுதி தனிப் பகுதியாக வளரத்தொடங்கியது. இலங்கையைத் 'தர்ம துவீபம்' எனப் போற்றிய பெளத்த சங்கத்தினர் அதன் வரலாற்று முக்கியத்துவத்தினைக் காட்டும் நோக்குடன் அவ்வரசியல் பகுதியைத் தனி நூலாக எழுதிப் போற்றத் தொடங்கினர்.

இதனால் தம் மதத்திற்கு ஆதரவளித்த மன்னர்களின் பதிவுகள் அதிகமாகவும் சுய சார்புத்தன்மையுடயனவாகவும் அமைய, அதற்கு மாறாக அவர்களுக்கு ஆதரவளிக்காத அரசர்களின் நிகழ்ச்சிகள் புறக்கணிக்கப் பட்டும் அவை உருவாகின. இத்தகைய பதிவுகளில் அரச அதிகாரமும் பெளத்தமும் இணைந்திருந்தது.இவ்விபரத்தொகுதியில் இருந்து பெறப்ப்ட்ட நேரடி விளைவே மிக முக்கிய வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சமாகும்.

பெளத்த பிக்குகளால் தனியாக எழுதப்பட்ட அதிகார பூர்வ மன்னர்களுடய வரலாற்றோடு செவி வழியாக வந்த புராணக்கதைப் பண்பைக் கொண்டிருந்த வடிவங்கள் இணக்கப் பட்டதுடன் இலங்கைக்கான பூரணமான வரலாற்று நூலாக மகாவம்சம் உருப் பெற்றது.
மகாவம்சம் எழுதப் பட்ட போது இரு வேறு பட்ட இன, மத, மொழிப் பண்புகளைக் கொண்ட மக்கள் காணப்பட்டனர் என்பதாகும். ஆனால் இதிலிருந்து முரண்பட்ட வகையில் இலங்கையின் தேசிய வரலாறு பெளத்தத்துடனும் சிங்கள இனத்துடனும் இணந்த வகையில் ஐதீக அம்சங்களை உள்ளடக்கியதாகக் காணப் படுகிறது. இதன் உச்சக்கட்ட வெளிப்பாட்டை எல்லாளன் - துட்டகைமுனு போர் சித்தரிப்பில் காணலாம். அது உண்மையில் ஓர் அரசியல் ஆதிக்கப் போராட்டமாக இருந்தும் கூட ஆசிரியர் அதனை ஓர் இனப் போராட்டமாகக் கூறிச் செல்கிறார்.37 அத்தியாயங்களைக் கொண்டுள்ள மகாவம்சத்தில் 21-32 வரையான அத்தியாயங்களில் துட்டகைமுணுவின் வீர வரலாறு கூறப் படுகிறது. இது இந்நூலின் 3/1 பகுதியாகும். இதில் துட்டகைமுனு தன் இனத்தையும் மதத்தையும் காப்பாற்றிய ஒரு தேசிய விடுதலை வீரனாகச் சித்தரிக்கப் படுகிறான்.

மகாவம்சம் இந்துக்களைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர்கள் தவறான நெறிகளை அனுஷ்டிப்போர் என்றே குறிப்பிடப் படுகின்றது.  எந்த ஒரு இடத்திலும் தமிழ் இந்துக்களும் இந்நாட்டுக்குரியவர்கள் என்ற குறிப்புக் காணப் படவில்லை. தமிழர்களைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் அவர்களை ஆக்கிரமிப்பாளர்களாகவும் இந்நாட்டுக்கு வந்த அன்னியர்களாகவுமே  குறிப்பிடப் படுகின்றது.

ஆனால் தொல்லியல் ஆய்வுகளும் சமூகவியல் மானிடவியல் தரவுகளும் இவற்றிற்கு முரணான வகையில் முடிவுகளைத் தந்துள்ளன. அவை இலங்கையும் தென்னிந்தியாவை ஒத்த வரலாற்று கால கலாசாரப் பண்பாடுகளைத் தன்னகத்தே கொண்டிருந்ததென்றும் படிப்படியான அரசின் வளர்ச்சி, பண்பாட்டுப் பரவல் பற்றியும் தெளிவான சான்றாதாரங்களைத் தந்துள்ளன.

மானிடவியல் ஆய்வு முடிவுகள் தென்னிந்திய - இலங்கை மக்கள் கூட்டம் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்ததென்பதையும் அது திராவிட அடிப்படை இயல்புகளைக் கொண்டுள்ளதென்பதையும் எடுத்துக் காட்டியுள்ளன. சமூகவியல் ரீதியானதும் மொழியியல் ரீதியானதுமான ஒற்றுமைகள் பல இன்றுவரை மத்திய தரை - தக்கிண-தென்னிந்திய ஈழப் பிராந்தியங்களின் தொடர்புகளைப் பற்றிய தெளிவான விளக்கங்களைத் தருகின்றன.

கட்டுக்கதைகள்

இலங்கையில் கட்டுக் கதைக்கும் வரலாற்றுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு அருவமானது, ஆபத்தானது. இலங்கை அரசியலில் இந்த மர்மக்கதையுலகு தீர்க்கமான பங்குவகித்து வருகிறது.  ஓர் இந்திய ஆரிய இளவரசி ஒரு சிங்கத்துடன் கூடிவாழ்கையில் உதித்த இனத்தைச் சேர்ந்தவர்களே சிங்களவர்கள் என்று சிங்கள மாணவர்களுக்கு புகட்டப்பட்டு வருகிறது. வரலாறு படிக்கும் மாணவர்களும்  இந்தக் கதையை படித்து ஏற்றுக்கொள்கிறார்கள்.

பெரும்பாலான சிங்கள - பௌத்த மக்கள் இதை ஒரு வரலாற்று நூலாகவும், புனிதப் பாடமாகவும் போற்றி வருகிறார்கள். அந்தச் சிங்க -இளவரசி தம்பதிகளின் பேரனையே சிங்கள இனத்தின் மூலகர்த்தாவாக மகாவம்சம் ஏற்றிப்போற்றுகிறது.  விஜயன் தீய நடத்தை கொண்டவன் என்று மகாவம்சமே கூறுகிறது.  அவனும் அவனுடைய தோழர்களும் பயங்கரக் குற்றங்கள் பலவும் புரிந்தார்கள் என்றும் ஈற்றில் அவனுடைய தந்தை அவர்களை நாடு கடத்தினான் என மகாவம்சம் கூறுகிறது.

விஜயனை நாடுகடத்தி, கப்பலில் ஏற்றி அனுப்பிய வேளையிலேயே கௌதம புத்தர் இயற்கை எய்தியதாகக் மகாவம்சம் கூறுகிறது . புத்தர்  இயற்கை எய்தும் தருவாயில் தேவர்களது அரசனும் புத்த தர்மத்தின் (புத்தர் போதித்த போதனைகள்) தெய்வீக காவலனுமான இந்திரனை அழைத்து "லாலா நாட்டு அரசனான சிங்கபாகுவின் மகனான விஜயன் தனது 700 கூடடாளிகளோடு லங்காவில் கரையிறங்கியுள்ளான். லங்காவில் எனது சமயம் நிலை நிறுத்தப்படும். எனவே அவனையும் அவனது பரிவாரத்தையும் லங்காவையும் கவனமாகக் பாதுகாப்பாயாக" எனக் கட்டளை இட்டார் என மகாவம்சம் கூறுகிறது. (மகாவம்சம் - அத்தியாயம் V11)

Buddha, seated on a throne on which nibbana was achieved the great divine sage, addressed this celebrated injunction to Sakka, the king of gods and the divine protector of the sasana (the dhamma doctrine as taught by Buddha) and instructed him "One Vijaya, son of Sinhabahu, king of the land of Lala together with his 700 officers of state has landed on Lanka. O Lord of devas! My religion will be established in Lanka. On that account thoroughly protect together with his retinue, him and Lanka." (Mahavamsa –Ch.V11)

இலங்கையில் பவுத்த மதம் பரவியிருந்த காலத்தில் பவுத்த விகாரைகளில் வாழ்ந்து வந்த தேரர்கள் சமய மரபுகள் குறித்தும் மன்னர்களின் ஆட்சி பற்றியும் அவர்கள் வெட்டிய குளங்கள், கட்டிய விகாரைகள் குறித்தும் ஏடுகளில் எழுதி வைத்ததோடு அவற்றை வாய்மொழி மூலமாகவும் பரப்பி வந்தார்கள்

மகாவம்சத்தை எழுதியதன் நோக்கத்தை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் நுலாசிரியர் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக ஆறாம் அத்தியாயத்தின் முடிவில் பவுத்த பக்தர்களின் அமைதியான ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட மகாவம்சத்தின் விஜயனின் முடிசூடல் என்ற 6 ஆம் அத்தியாயம் இத்துடன் முடிவுற்றது" எனக் கூறுகிறார்

எனவே மகாவம்சம் ஒரு வரலாற்று நூலல்ல. அது பவுத்த சமயத்தவரது ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட நூல். பெரியபுராணம் 63 சைவ நாயன்மார்களது கதைகளை புகழ்ந்து பாடுவது போல் மகாவம்சம் பவுத்தத்தை வளர்த்த அரசர்களது புகழைப் பாடுகிறது.

மகாவம்சத்தை முற்று முழுதாக இலங்கை வரலாற்றைக் கூறும் நூல் எனக் கொள்ள முடியாவிட்டாலும் அதனை முற்று முழுதாகப் புறக்கணித்து விடவும் முடியாது. இலங்கை வரலாற்றை ஓரளவு புரிந்து கொள்ள மகாவம்சம் ஒரு கால அளவு நூலாக விளங்குகிறது என்பதும் உண்மை.

இலங்கைக்கு புத்தரின் இரண்டாவது வருகை

புத்தர் இரண்டாம் முறை மணிபல்லவத்தை ஆண்ட மகோதரன் - குலோதரன் என்ற இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்காக வருகின்றார். முன்பு சூறைக்காற்றை உருவாக்கி ஆதிக்குடிகளைப் பயமுறுத்தி அடிபணிய வைத்த புத்தர் இம்முறை பயங்கர இருளைப் பரவச்செய்து நாக மன்னர்களையும் அவர்களது வீரர்களையும் பயப்பீதி கொள்ள வைக்கின்றார். பின்னர் அங்கு வாழ்ந்த எட்டுக்கோடி நாகர்களுக்கு ‘புத்தம் - தர்மம் - சங்கம்’ என்ற போதனைகளை அருளுகின்றார்.

இலங்கைக்கு புத்தரின் மூன்றாவது வருகை

புத்தரின் இரண்டாவது வருகைக்கு பின் மூன்று ஆண்டுகள் கழித்து புத்தர் மீண்டும் இலங்கைக்கு மூன்றாவது முறை வருகை செய்கின்றார்.  கல்யாணி (இன்றைய களனி) என்ற நாட்டை ஆண்ட மகோதரன் தாயின் உடன்பிறப்பு மணியக்கியா மன்னனது வேண்டுதலை ஏற்று அங்கு சென்று அந்த இடங்களை அருள்வாழ்த்தித் திரும்புகின்றார்.

புத்தரின் வரலாறு

"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிருவாணம்" அல்லது "நிருவாண நிலை" என்று அழைக்கப்படுகிறது.

கவுதம புத்தர் கபிலவஸ்து அருகிலுள்ள  லும்பினி என்ற ஊரில் கிமு 566 இல் சாக்கிய குலத்தில் பிறந்தார். கபிலவஸ்து நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது. புத்தர் பிறப்பிடம் அசோக மௌரியர் எழுப்பிய நினைவுத் தூண் சின்னத்தால் புகழ் பெற்று விளங்குகிறது.பெற்றோர் அவருக்கு சித்தார்த்தர் என்று பெயரிட்டு அழைத்தனர். அவருடைய தந்தை சுத்தோதனர், தாயார் மாயாதேவி. சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர், கபிலவஸ்துவைத் தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னராவார்.

ஞானம் பெற்ற புத்தர், வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத் "மான் பூங்கா" என்னுமிடத்தில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் அயோத்தி, பீகார், அதையடுத்த பகுதிகளின் மக்களுக்கும், மன்னருக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை நடத்தி வெற்றிகண்டார்.

கபிலவஸ்துவில் இராகுல், மகா பிரஜாபதி ஆகியோரைத் தன் சமயத்தில் சேர்த்துக் கொண்டார். மகத மன்னர்களான பிம்பிசாரர், அஜாதசத்துரு ஆகியோர்களை பவுத்த சமயத்தை தழுவும்படி செய்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பவுத்தத்தை தழுவிட வழிகோலினார்.

இந்த இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", "எண் வகை வழிகளையும்" கூறினார். பிறகு தனது 80 ஆவது அகவையில், குசி நகரத்தில் கிமு 483 பரி நிருவாணம் அடைந்தார்.

இயக்கர்களை பயமுறுத்தி அகற்றியது போல் புத்தரால் நாகர்களை அகற்ற முடியவில்லை. நாக வழிபாடும் இலங்கையை ஆண்ட மன்னர்கள் பெயர்களும் இலங்கையின் வட புலம் நாகதீபம் என அழைக்கப்பட்டதும் தென்மேற்கு கல்யாணி என அழைக்கப்பட்டதும் இலங்கைத் தீவின் பழைய வரலாற்று உண்மைகளைப் பேரளவு மகாவம்சம் உறுதிசெய்கிறது.

(1) கல்லாடநாகன் (கிமு 50 - 44)
(2) சோரநாகன் (கிமு 3 - 9)
(3) இளநாகன் (கிபி 96 - 103)
(4) மாகலக்க நாகன் (கி.பி 196 - 203)
(5) குஜ்ஜநாகன் (கிபி 246 - 248)
(6) குட்டநாகன் (கிபி 248 - 249)
(7) ஸ்ரீநாகன் I (கிபி 249 - 269)
(8) அபயநாகன் (291 - 300)
(9) ஸ்ரீநாகன் II (கிபி 300 - 302)
(10) மகாநாகன் (கிபி 556 -568)

எனப் பல நாக அரசர்கள்  இலங்கையை 6 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுள்ளார்கள். தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே ஆகும். எடுத்துக் காட்டாக ஸ்ரீநாகன் II தந்தை பெயர் வீர தீசன்.
(The Early History of Ceylon by G.C.Mendis -pages 83-85)

துட்ட கைமுனு - எல்லாளன் போர் சிங்கள - தமிழ் இருசாராருக்கும் இடையிலான போரல்ல. அது பவுத்த நாக அரசனுக்கும் இந்து எல்லாள மன்னனுக்கும் இடையில் நடந்த சமயப் போர். இரண்டு அரசர்களது படைகளிலும் பவுத்த தமிழர்கள் இருந்திருக்கிறார்கள்.
அனுராதபுரத்தின் மீது படையெடுத்துச் சென்ற துட்ட கைமுனு இடையில் 32 தமிழ் சிற்றரசர்களை போரில் வென்றதாக மகாவம்சம் கூறுகிறது. இந்தக் கால கட்டத்தில் மகாவலி கங்கைக்கு வடக்கில் உள்ள பிரதேசத்தைத் தமிழ் அரசர்களே ஆண்டனர். விஜயன் வழிவந்த இளநாகனுக்குப் (கிபி 34 -40) பின்னர் இலம்புக்கானர் என்ற இன்னொரு வம்சம் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் இலங்கையை ஆண்டனர். எனவே சிங்களவர்கள் தாங்கள்தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்பதும் இலங்கை சிங்கள தேசம் என்பதும் திரிபுவாதமாகும்.

வங்கம், கலிங்கம் போன்ற நாடுகளில் இருந்து இலங்கையில் காலத்துக்குக் காலம் குடியேறிய வந்தேறுகுடிகள் பூர்வகுடிகளான நாகர், இயக்கர், வேடர், பவுத்த தமிழர் ஆகியவர்களோடு கலந்து சிங்களவர் எனத் தோற்றம் பெற்றனர்.

மகாவம்சம் புனைந்துள்ள கதையில் சில உண்மைகள் மறைந்து காணப்படுகின்றன. மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என இயக்கர், நாகர், தரச்சர், லம்புக்காணர் (முயல் அல்லது ஆடு), பாலிபோஜகர் (காகம்), மோரியர் (மயில்), புலிங்தர் (வேடர்) இவர்களைக் குறிப்பிடுகிறது. இலங்கையை இயக்கர்குல மன்னனான இராவணன் ஆண்டான் என்ற இராமாயண இதிகாசக் கதை இயக்கர்கள் இலங்கையில் வாழ்ந்ததைக் காட்டுகிறது. மகாவம்ச ஆசிரியர் ஆதிக் குடிகளைக் குறிப்பிடும் போது தமிழர்களை வேண்டும் என்றே விட்டுவிட்டார்.

மகாவம்சத்தின் ஆறாவது அத்தியாயம் விஜயன் முடிசூட்டிக் கொண்டதைக் கூறுகிறது. ஏழாவது அத்தியாயம் விஜயன் புனிதனாக்கப்படுவது பற்றிக் கூறுகிறது. விஜயனின் வருகையோடுதான் இலங்கையின் வரலாறு தொடங்குவதாக மகாவம்ச மனோபாவம் படைத்தவர்கள் எண்ணுகிறார்கள். இந்த எடுகோள் தவறானது.

இலங்கையில் பண்டு தொட்டு தமிழர் எவரும் வாழவில்லை என்றும் சிங்கள அரசுகள் மீது படையெடுத்து வந்த சோழ, பாண்டியர் படைகளோடே தமிழ் மக்கள் ஈழத்தில் வந்து குடியேறினர் என சில சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் துட்ட கைமுனு காலத்தில் மாகா கங்கைக்கு அப்பால் தமிழர்கள் வாழ்ந்தார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது.

இராமாயணத்தில் (கிமு 800) இலங்கைத் தீவு லங்கா என அழைக்கப்பட்டது. கிபி 4 – 5 ஆம் நூற்றண்டுகளில் சிங்களமொழி இல்லாததால் தீபவம்சம், மகாவம்சம் என்ற பவுத்த புராணங்களை பாளிமொழியில் எழுதினார்கள். இலங்கையைச் சுட்ட சிங்களத்தில் சொல் இல்லை. லங்கா என்பது சமற்கிருதச் சொல்லாகும்.

பவுத்தத்தின் வருகையோடு இணைந்து வந்த வட இந்திய பேச்சு மொழியாகிய பாளிப் பிராகிருதம் இலங்கையில் நாகர், இயக்கர், வேடர் போன்றோரால் பேசப்பட்ட எலு மொழியுடன் இணைந்து பவுத்த மதத்தினைப் பின்பற்றுவோருக்கு மொழி அடிப்படையில் ஒரு அடையாளத்தை வழங்க 8 ஆம் நூற்றாண்டில் சிங்கள மொழி ஒன்றைப் பவுத்த தேரர்கள் உருவாக்கினார்கள்.

தமிழில் உள்ள உறவுப் பெயர்கள் சிங்களத்தில் புகுந்துள்ளன. தாத்தா, தாத்தி, அப்பாச்சி - அப்பா, அம்மே (மலையாளத்திலும் அம்மேதான்!)) - அம்மா ஆச்சி - அம்மம்மா அல்லது அப்பம்மா, சீயா - அப்பப்பா அல்லது அம்மப்பா, அய்யா - அண்ணா, அக்கா - அக்கா, மல்லி - தம்பி, நங்கி - தங்கை, சகோதரயா - சகோதரன், புத்தா - மகன் துவ - மகள், பேனா - மருமகன், மல்லி கே புத்தா - தம்பியின் மகன், அக்கா கே துவ - அக்காவின் மகள், லொக்கு அம்மா - பெரியம்மா, லொக்கு தாத்தா - பெரியப்பா, மாமா - மாமா மசினா - மச்சான்,

பவுத்த மதத்தினைப் பின்பற்றுகின்ற மக்கள் அதனோடு இணைந்த மொழி வடிவத்தினைப் பின்பற்ற பவுத்த மதத்தினைச் சாராத ஏனையோர் திராவிட மொழி வடிவத்தினைப் பின்பற்றினர். அதனால் பவுத்த மதத்துடன் இணைந்து கொண்ட மொழி உருவாக்கமானது பவுத்தர் - பவுத்தர் அல்லாதோர் ஆகியோரை மொழி அடிப்படையிலும் வேறு படுத்தியது.
பல்லவர் காலத்தில் (கிபி 6 - 7 ஆம் நூற்றாண்டளவில்) தமிழ்நாட்டில் ஏற்பட்ட இந்து சமய எழுச்சியின் தாக்கம் காரணமாக அங்கு வாழ்ந்த தமிழ் பவுத்தர்கள் இலங்கைக்கு இடம் பெயர்ந்தார்கள். இதனால் இலங்கையில் பவுத்தர் - பவுத்தரல்லாதோர் ஆகியோருக்கிடையே இருந்து வந்த இடைவெளி மேலும் அதிகரித்தது.

இந்தப் புனைந்துரை பின்னர் எழுதப்பட்ட மதசார்பு சிங்கள வரலாற்று நூல்களிலும் இலக்கியங்களிலும் பவுத்த சடங்குகளிலும் (சூளவம்சம், புஜவாலியா, தூபவம்சா, இராஜவாலியா....) மீண்டும் மீண்டும் தலைமுறை தலைமுறையாக கைமாறப்பட்டு வருகின்றன. இதனால் அவை இன்றைய சிங்கள - பவுத்த மக்களது நம்பிக்கைகளில் ஒரு தெய்வீக இடத்தைப் பிடித்துள்ளன. சிங்கள அறிஞர்கள் இந்தக் கட்டுக்கதைகளையும் கற்பனைகளையும் இலங்கையின் தொன்மை வரலாறாகச் சித்திரிதுள்ளனர்.
மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயத்தை சற்று விரிவாக ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் தெரியவரும்.

முன்னர் குறிப்பிட்ட நாகர், இயக்கர், அரக்கர், புலிந்தர் (வேடர்) ஆகியோர் இனத்தால் திராவிடர்களே. சமயத்தால் சைவர்களே. இதேபோல் கலிங்கத்திலிருந்து இலங்கை வந்த விஜயனும் அவனோடு வந்தவர்களும் சமயத்தால் சிவவழிபாட்டினரே.
நாகர், இயக்கரை மனிதரல்லாதோர் அல்லது அரைமனிதர்களாக மகாவம்சம் சித்தரிப்பதன் நோக்கம் அன்றைய நாக, இயக்க பவுத்தர்களே இலங்கையின் ஆதிக்குடியென்ற மாயையைத் தோற்றுவிப்பதற்கேயாகும்.

விஜயன் இலங்கையில் தரையிறங்கியபோது இன்றுள்ள அய்ந்து ஈசுவரங்களான திருக்கேதீசுவரம், நகுலேசுவரம், திருக்கோணேசுவரம், இலங்கையின் தென்பகுதியில தொண்டீசுவரமும் இருந்தன என யாழ்ப்பாண வைபமாலை குறிப்பிடுகிறது. தொண்டீசுவரம் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட போத்துக்கீசியரால் சிதைக்கப்பட்டது. சிதைக்கப்பட்ட கோயிலை அவ்விடத்தைச் (மாத்தறை) சேர்ந்த சிங்கள பவுத்த மக்கள் விஷ்ணு ஆலயமாக மாற்றி வழிபடுகின்றனர்.

திருக்கேதீசுவரமும் திருக்கோணேசுவரமும் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞனசம்பந்த நாயனார், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய இருவராலும் தேவாரப் பாடல்பெற்ற திருக்கோயில்களாகும்.

மேல்குறிப்பிட்ட அய்ந்து ஈசுவரங்களைவிட தென்னிலங்கையில் புகழ்பெற்ற கதிர்காமம், தேவேந்திரமுனையில் சந்திரமௌலீசுவரர் போன்ற சைவசமய கோயில்களும் நடுவில் சிவனொளிபாத மலையும் இருந்தன.

பவுத்த மதத்தைத் தழுவிய முதல் அரசன் தேவநம்பிய தீசனே. இவனுக்கு முன்னர் அனுராதபுரத்தை ஆண்ட அரசர்கள் வைதீக மதத்தவரே. தேவநம்பிய தீசனின் தந்தை பெயர் மூத்த சிவன் (கிமு 307 – 247) ஆவான். இவர்கள் நாக வம்சத்தைச் சேர்ந்தவர்கள். மகாநாகன் இவனது உடன்பிறப்பு ஆவான். இவன் துட்ட கைமுனுவின் பாட்டனுக்குப் பாட்டன் (ஒட்டன்) ஆவன்.

சிகல (பாளி மொழியில் சிங்கம்) என்ற சொல் முதன் முதலாக தீபவம்சம் என்ற நூலிலேயே (4–5 ஆம் நூற்றாண்டு) அதுவும் ஒரே ஒரு முறை குறிப்பிடப்படுகிறது. இலங்கைத் தீவைக் குறிக்கவே இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மகாவம்சத்தில் இந்தச் சொல் இரண்டு முறை குறிக்கப்படுகிறது.

மகாநாகனே தேவநம்பிய தீசனின் பின் ஆட்சிக் கட்டில் ஏறியிருக்க வேண்டும். ஆனால் அவன் தேவநம்பிய தீசனின் மகனைக் கொல்லச் சதிசெய்தான் என அய்யத்துக்கு உள்ளானதால் அவன் தனது மனைவி அனுலா தேவியோடு உருகுணவுக்குத் தப்பியோடி அங்கு ஒரு அரசை (மாகம) அமைத்துக் கொண்டான். அவனுக்குப் பின் அவனது மகன் யாதல தீசன் ஆட்சிக்கு வந்தான். யாதல தீசனை அடுத்து அவனது மகன் கோத்தபாயவும் அதன் பின்னர் அவனது மகன் காகவண்ண தீசன் (மகாவம்சம் இவனது பெயரை காவன் திச என மாற்றிவிட்டது) ஆட்சி பீடம் ஏறினான். இவன் களனியை ஆண்ட நாக அரசனின் மகளான விகாரமாதேவியை மணம் செய்து கொண்டான். இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளே துட்ட கைமுனுவும் சாத்த தீசனும் ஆவர். தந்தை சொல் தட்டியதன் காரணமாகவே ‘துட்ட’ என்ற அடை மொழி கொடுக்கப்பட்டது.

எனவே மகாவம்சத்தின் கதைநாயகனான துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய்வழியிலும் நாகர் இனத்தைச் சேர்ந்தவன் ஆவான். எனவே அவனும் எல்லாளனும் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். எல்லாளன் வைதீக சமயத்தவன், துட்ட கைமுனு பவுத்த சமயத்தவன்.

தமிழ்மன்னன் எல்லாளன் அனுராதபுரத்தில் நீதி தவறாத செங்கோலாட்சியை நடாத்தினாலும் அவன் "புன்னெறி" (false beliefs) கொண்டவன் என்ற காரணத்தாலேயே அவன் மீது துட்டகைமுனு படையெடுத்தான் என மகாவம்சம் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாது எல்லாளன் - கைமுனு யுத்தத்தத்தை தமிழர்களுக்கு எதிராக துட்ட கைமுனு நடாத்திய புனிதயுத்தம் எனக் காட்ட மகாவம்சம் முயன்றுள்ளது. ஆனால் எல்லாளன் - துட்டகைம்முனு யுத்தத்தின்போது எல்லாளன் தரப்பில் மட்டுமல்ல துட்டகைமுனுவின் படையிலும் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள்.

கைமுனுவின் படைத்தளபதிகளில் ஒருவனானக நந்தமித்தன் இருந்திருக்கிறான். இவனது நெருங்கிய உறவினன் எல்லாளன் படையின் சேனாதிபதியாக இருந்திருக்கிறான். அது மட்டும் அல்லாது உருகுணையிலிருந்து அனுராதபுரத்துக்கு படையெடுத்து வந்த கைமுனு இடையில் சிற்றரசர்களாக இருந்த 32 தமிழரசர்களைப் போரில் வென்றான் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது. இது கிமு இரண்டாம் நூற்றாண்டில்  இலங்கையில் தமிழர்கள் பரவி வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.
மகாவம்ச ஆசிரியர் மகாநாம தேரோ எல்லாளன் - துட்ட கைமுனுக்கு இடையிலான போரைத் தமிழர் – தமிழர் அல்லாதா பவுத்தர் இடையிலான போராக  சித்திரித்து இருக்கிறார். துட்ட கைமுனு பவுத்தனாக இருந்தும் அவன் முருக வழிபாடு செய்பவனாக இருந்தான். எல்லாளன் மீது படையெடுத்துப் புறப்படு முன்னர் கதிர்காமக் கடவுளின் அருள் வேண்டி அவரை வழிபட்டான் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. மேலும் மகியங்கனை தொடங்கி அனராதபுரம் வரை ஆண்ட 32 தமிழ்ச் சிற்றரசர்களைக் கைமுனு போரிட்டு வென்றான் என மகாவம்சம் கூறுகிறது.

இந்த வெற்றிகளுக்குப் பின்னர் கைமுனு 'இராச்சியங்களைப் பிடிக்க அல்ல நான் போர் தொடுத்தது. புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே நான் போர் செய்தேன். இதுவே உண்மை என்பதை எண்பிக்க எனது படையினரின் மேனி தீயின் நிறத்தை எடுக்கட்டும்' என சூளுரைத்ததாக மகாவம்சம் தெரிவிக்கிறது. (மகாவம்சம் - அதிகாரம் 25)

துட்டகைமுனு சிங்கள அரசன்என்பது முற்றிலும் தவரான  பார்வை.

மகாவம்சத்தில் அப்படியொரு குறிப்பு எதுவும் இல்லை.                                               துட்ட கைமுனு தாய் வழியிலும் தந்தை வழியிலும் நாக வம்சத்தவன் ஆவான். அவனது தாயார் விகாரமாதேவி கல்யாணி (கலனி) இராச்சியத்தை ஆண்ட நாக மன்னன் மகளாவாள். துட்டகைம்முனுவின் தந்தை காக்கைவண்ணதீசன். அவனது தந்தை பெயர் கோத்தபாய. பாட்டன் பெயர் மகா நாகன். மகாநாகன் தேவநம்பிய தீசனின் சகோதரன் ஆவான். மகாநாகன் அநுராதபுரத்தை விட்டு மனைவியோடு ஓடி ரோகணாவுக்குச் (தென்னிலங்கையை) சென்று தனக்கென நாக மகா விகலம் என்ற நகரை உருவாக்கினான். மகாவம்சம் எந்த இடத்திலும் துட்டகைமுனுவை சிங்களவன் என்று சொல்லவில்லை. துட்ட கைமுனுவுக்குப் பின்னர் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னர்கள் நாகவம்சத்தவரே.

கோரநாகன், மகாநாகன், குஜநாகன், சிறீநாகன், குஞ்சநாகன், இள நாகன் என எண்ணற்ற அரசர்கள் நாக பின் ஒட்டோடு இலங்கையை ஆண்டுள்ளார்கள். தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே. துட்ட கைமுனு - எல்லாளன் போர் சிங்கள - தமிழ் அரசனுக்கு இடையிலான போரல்ல. பவுத்த நாக அரசனுக்கும் இந்து எல்லாள மன்னனுக்கும் இடையில் நடந்த போர். இரண்டு அரசர்கள் பக்கம் இந்து தமிழர்கள் மற்றும் பவுத்த தமிழர்கள் இருந்திருக்கிறார்கள்.

அனுராதபுரத்தின் மீது படையெடுத்துச் சென்ற துட்ட கைமுனு இடையில் 32 தமிழ் சிற்றரசர்களை போரில் வென்றதாக மகாவம்சம் சொல்கிறது. இந்தக் கால கட்டத்தில் மகாவலி கங்கைக்கு வடக்கில் உள்ள பிரதேசத்தைத் தமிழ் அரசர்களே ஆண்டனர். விஜயன் வழிவந்த இளநாகனுக்குப் (கிபி 34 -40) பின்னர் இலம்புக்கானர் என்ற இன்னொரு வம்சம் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் இலங்கையை ஆண்டனர். எனவே சிங்களவர்கள் தாங்கள்தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்பது திரிபுவாதமாகும். அவர்களது முன்னோர்களில் சிலர் வந்தேறுகுடிகள். அவர்கள் பூர்வகுடிகளான நாகர், இயக்கர், பவுத்த தமிழர் இவர்களோடு கலந்து சிங்களவர்களாக தோற்றம் பெற்றனர்.

சிங்களவர் என்ற இனமோ, சிங்களம் என்ற மொழியோ  8 ஆம் நூற்றாண்டுவரை உருவாகவில்லை. தென்னிந்திய பவுத்த தேரர்களே, சிறப்பாக அமராவதியை ( இன்றைய ஆந்திரா) சேர்ந்த பவுத்த தேரர்களே இலங்கையின் பூர்வீக குடிமக்கள் பேசிய எலு மொழியோடு பாலி, தமிழ், சமற்கிருதத்தைக் கலந்து சிங்கள மொழியை உருவாக்கினார்கள்.  அவர்களே சிங்கள மொழியின் வரிவடிவம் வரைந்தவர்கள் ஆவர். அந்த எழுத்துக்கள் பெரிதும் தெலுங்கு மொழி எழுத்துக்களை ஒத்ததாக உள்ளன.
விஜயனுக்குப் பின்னர் ஈழத்தின் பூர்வீககுடிகளில் (இயக்கர், இராட்சதர், நாகர், தமிழர்) ஒன்றான நாக அரசர்கள் அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு  ஆயிரம் ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளார்கள். மகாவம்சம் என்ற பாலி நூல் துட்ட கைமுனு - எல்லாளன் போரை சிங்களவர் - தமிழர் போராகச் சித்தரிக்கவில்லை. அப்படிச் சித்தரிப்பது தவறு.  எல்லாளன் - துட்டகைமுனு யுத்தம் பவுத்த நாக அரசனுக்கும் இந்து எல்லாளனுக்கும் இடையிலான யுத்தமாகும்.

துட்டகைமுனுவை சிங்களவன் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது தவறு. அவன் பவுத்த மதத்தைத் தழுவிய நாக இனத்தவன். தாய் வழியிலும் தந்தை வழியிலும் நாக வம்சத்தவன் ஆவான். அவனது தாயார் விகாரமாதேவி கல்யாணி (கலனி) இராச்சியத்தை ஆண்ட நாக மன்னன் மகளாவாள். துட்டகைம்முனுவின் தந்தை காக்கைவண்ணதீசன். அவனது தந்தை பெயர் கோத்தபாய. பாட்டன் பெயர் மகா நாகன். மகாநாகன் தேவநம்பிய தீசனின் சகோதரன் ஆவான்.  தேவநம்பிய தீசனே பவுத்த மதத்தைத் தழுவிய முதல் அரசனாவான். மகாநாகன் அநுராதபுரத்தை விட்டு மனைவியோடு ஓடி ரோகணாவுக்குச் (இன்றைய மாத்தறை, அம்பாந்தோட்டை, கதிர்காமம்) சென்று தனக்கென நாக மகா விகலம் என்ற நகரை உருவாக்கினான். மகாவம்சம் எந்த இடத்திலும் துட்டகைமுனுவை சிங்களவன் என்று சொல்லவில்லை. மகாவம்சத்தின் படி மகாவலி கங்கைக்கு வடக்கே தமிழர்கள் வாழ்ந்தார்கள்.  இந்துக்களான தமிழர்களுக்கும் பவுத்தர்களான நாகர்களுக்கும் சமய அடிப்படையில் பகை இருந்தது.

மகாவம்சம் சிங்கத்தைக் குறிக்கும் சிகல என்ற சொல்லை இருமுறைதான் பயன்படுத்தியுள்ளது.  எல்லாளனைத் தோற்கடித்த பின்னர் துட்டகைமுனு அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டான்.  அவனுக்குப் பின்னர் ஆட்சிசெய்த  மன்னர்கள் எல்லோரும்  நாகவம்சத்தவரே. கோரநாகன், மகாநாகன், குஜநாகன், சிறீநாகன், குஞ்சநாகன், இள நாகன் என எண்ணற்ற அரசர்கள் நாக பின் ஒட்டோடு இலங்கையை ஆண்டுள்ளார்கள். தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே.

துட்ட கைமுனு - எல்லாளன் போர் சிங்கள - தமிழ் அரசனுக்கு இடையிலான போரல்ல. பவுத்த நாக அரசனுக்கும் இந்து எல்லாள மன்னனுக்கும் இடையில் நடந்த போர். இரண்டு அரசர்கள் பக்கம் இந்து தமிழர்கள் மற்றும் பவுத்த தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். அனுராதபுரத்தின் மீது படையெடுத்துச் சென்ற துட்ட கைமுனு இடையில் 32 தமிழ் சிற்றரசர்களை போரில் வென்றதாக மகாவம்சம் சொல்கிறது. இந்தக் கால கட்டத்தில் மகாவலி கங்கைக்கு வடக்கில் உள்ள பிரதேசத்தைத் தமிழ் அரசர்களே ஆண்டனர். விஜயன் வழிவந்த இளநாகனுக்குப் (கிபி 34 - 40) பின்னர் இலம்புக்கானர் என்ற இன்னொரு வம்சம் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் இலங்கையை ஆண்டனர். எனவே சிங்களவர்கள் தாங்கள்தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்பது திரிபுவாதமாகும். அவர்களது முன்னோர்களில் சிலர் வந்தேறுகுடிகள். அவர்கள் பூர்வகுடிகளான நாகர், இயக்கர், இராட்சதர், புலிந்தர், பவுத்த தமிழர் இவர்களோடு கலந்து சிங்களவர்களாகத் தோற்றம் பெற்றனர்.

தீபவம்சம், மகாவம்சம் மற்றும் சூழவம்சம் நூல்களில் காணப்படும் முரன்பாடுகள்.

புத்தரின் இலங்கை வருகை பற்றி எந்த விதமான ஆதாரங்களும் இலை. மேலும் புத்தர் தெனிந்தியாவிற்கே வரவிலலை என்பதும் உண்மை, இது இப்படி இருக்க புத்தர் மூன்று முறை இலங்கை வந்தார் என்று மகாவம்சம் கூறுவது தவறு என்று பல்வேறு ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர்.

புத்தர் இலங்கைத் தீவுக்கு வந்ததாக மகாவம்சம் சொல்லும் கதை கற்பனை ஆகும். புத்தர் வட இந்தியாவை விட்டு வேறெங்கும் செல்லவில்லை. தெற்கேயுள்ள தமிழகத்துக்கும் வரவில்லை.

பவுத்தத்தை புத்தரே நேரில் வந்து இலங்கையில் போதித்தார் என்று முதல் அத்தியாயம் சொல்கிறது.

பிறகு சங்கமித்ரையும், மகிந்தரும் பவுத்தத்தை இலங்கைக்குக் கொண்டு வந்தார்கள் என்கிறது மகாவம்சம்.

அதுவும் மொகாலியின் மகன் திஸ்சா என்பவரால்தான் மகிந்தனும், சங்கமித்திரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்று சொல்லும் மகாவம்சம்,
அசோகரின் பெயரை மறைத்துவிட்டது, விட்டுவிட்டது.

உண்மையில் சங்கமித்திரை என்ற பெண் அசோகரின் மகளே அல்ல. இது ஒரு கற்பனைப் படைப்பு.

மகிந்தன் அசோகரின் இளைய தம்பி. அசோகரின் மகன் அல்ல என்கிறார் வின்சன்ட் ஸ்மித்.

மகிந்தன், சங்கமித்திரை என்ற இருவரும், வரலாற்றை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பவுத்த நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள்.

அசோகரின் கல்வெட்டுகளில் இடம்பெறாத மகிந்தனும், சங்கமித்ரையும் மகாவம்சத்தால் உருவாக்கப்பட்டவர்கள் என்பது கவனிக்க வேண்டிய செய்தி. அதாவது அசோகரைப் புறக்கணிக்க உருவாக்கப்பட்டவர்கள். இதுவும் ஆரியத்தின் சூழ்ச்சி.

அசோகரோடு இவர்களைத் தொடர்பு படுத்துவதால் கற்பனை வரலாறு, மேலும் வலுவடையும். சரித்திரக் கதைகள் சாதாரண நிகழ்வுகளை மேலும் மிகைப்படுத்திக்   காட்டும்” என்கிறார் பேராசிரியர் ஓல்டன் பர்க்.

இலங்கையின் பவுத்த நூலாகக் கருதப்படும் மகாவசம்ச அத்தியாயம் 5, 189 ஆம் பாகத்தில், அசோகன் கொடும் பாதகன் என்ற பொருளில் “சண்டாள அசோக” என்று தூற்றிப் பேசப்பட்டி ருக்கிறார்.

உண்மையில் அசோகர் ஆரியத்தின் சிம்ம சொப்பனம்.

மகாவம்சத்தின் முதல் நூலான தீபவம்சத்தில் எல்லாளன் - துட்டகைமுனு போர் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

 தீபவம்சம் எல்லாளனை  "சத்ரிய வம்ச இளவரசன்"  எனக் குறிக்கிறது. மகாவம்சம் எல்லாளன் உயர்குலத்தில் பிறந்தவன் என்றும் சோழ நாட்டில் இருந்து வந்தவன் என்றும் குறிப்பிடுகிறது. அத்துடன், இவன் நீதி தவறாது ஆட்சி செய்தான் என்றும் கூறுகிறது.

பூஜாவலி என்னும் வரலாற்று நூலின் ஆசிரியர் மயூரதேரோ  எல்லாளனை மிகவும் கொடூரமானவனாகவும் அநீதியான ஆட்சியாளனாகவும் மடங்களையும் பெளத்த நிறுவனங்களை அழித்தவனாகவும் கூறுகிறார்.

தீபவம்சத்தில் துட்ட கைமுனு பற்றிப் பத்துப் பாடல்களே காணப்படுகின்றன.
பிக்குணி சங்கமித்தை வெள்ளரசோடு இலங்கை வந்த கதையும் தீபவம்சத்தில் காணப்படவில்லை.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top