Contact Us

Name

Email *

Message *

2019-08-11 நிகழ்வுகள்

2019-08-11 நிகழ்வுகள்



நிகழ்வுகள்


கிமு 30 * அலெக்சாந்திரியா சமரில் மார்க் அந்தோனியின் படைகள் ஒக்டாவியனின் படைகளை வென்றன. ஆனாலும் அந்தோனியின் பெரும்பாலான படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் அடுத்தநாள் தற்கொலை செய்து கொண்டான்.
781 * பூஜி எரிமலையின் பதிவு செய்யப்பட்ட முதல் சீற்றம் இடம்பெற்றது.
1009 *நான்காம் செர்ஜியசு 142வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
1423 * நூறாண்டுப் போர்: கிரவாந்த் நகரச் சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலேயரிடம் தோற்றது.
1492 * எசுப்பானியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
1498 *தனது மூன்றாவது பயணத்தின் போது கிறித்தோபர் கொலம்பசு டிரினிடாட் தீவை அடைந்தார். இவரே இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார்.
1588 * எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு இங்கிலாந்தின் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
1655 * உருசியா லித்துவேனியாவின் தலைநகர் வில்னியூசைக் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது.
1658 * ஔரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசராக முடிசூடினார்.
1712 *பெரும் வடக்குப் போர்: தென்மார்க்கு, சுவீடன் கப்பல்கள் பால்ட்டிக் கடலில் மோதிக் கொண்டன.
1715*கியூபா, அவானாவில் இருந்து எசுப்பானியா திரும்பிக் கொண்டிருந்த 12 எசுப்பானிய புதையல் கப்பல்களில், 11 கப்பல்கள் புளோரிடா கரையில் மூழ்கின. சில நூற்றாண்டுகளின் பின்னர் இவற்றின் சிதைவுகளில் இருந்து பெருமளவு புதையல் மீட்கப்பட்டன.
1741 * புனித உரோமைப் பேரரசர் ஏழாம் சார்லசு ஆஸ்திரியா மீது படையெடுத்தார்.
1790 * முதலாவது அமெரிக்கக் காப்புரிமம் பொட்டாசு செயன்முறைக்காக சாமுவேல் ஒப்கின்சுக்கு வழங்கப்பட்டது.
1805 * இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.
1865 * உலகின் முதலாவது குற்றகலத் தொடருந்து சேவை ஆத்திரேலியா, குயின்சுலாந்து மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1913 * பால்க்கன் நாடுகள் புக்கரெஸ்ட்டில் அமைதி உடன்பாட்டுக்கு வந்தன.
1932 * செருமனியில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் நாட்சி கட்சி 38% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.
1938 * கிரேக்கம், துருக்கி, உருமேனியா, யுகோசுலாவியா ஆகிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என பல்காரியா உடன்பாட்டுக்கு வந்தது.
1938 * பெர்சப்பொலிஸ் நகரில் அகாமனிசியப் பேரரசர் முதலாம் டேரியசின் தங்கம், மற்றும் வெள்ளித் தட்டுகளைத் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
1941 * இரண்டாம் உலகப் போர்: சிமோலென்சுக் சண்டை முடிவுக்கு வந்தது. செருமனி 300,000 சோவியத் செஞ்சேனைப் படையினரைப் போர்கைதிகளாகப் பிடித்தனர்.
1954 * ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலிய குழு ஒன்று கே-2 கொடுமுடியை எட்டியது.
1964 * சந்திரனின் மிக அருகில் எடுக்கப்பட்ட படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
1971 * அப்பல்லோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் தரையுலவியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.
1972 * பிரித்தானிய இராணுவம் வட அயர்லாந்தின் ஆட்கள் செல்ல முடியாத புறநகர்ப் பகுதிகளைக் கைப்பற்றியது. சூயெசு நெருக்கடிக்குப் பின்னர் பிரித்தானியாவின் மிகப்பெரும் இராணுவ நடவடிக்கை இதுவாகும்.
1973 * அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் ஒன்று மாசச்சூசெட்ஸ், பாஸ்டன் விமான நிலையத்தில் மோதியதில் 89 பேர் உயிரிழந்தனர்.
1987 * ஆல்பர்ட்டா மாநிலத்தில் எட்மன்டன் நகரில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
1988 * மலேசியா, கோலப்புறையில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் உயிரிழந்தனர், 1,674 பேர் காயமடைந்தனர்.
1991 * ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கையெழுத்திட்டன.
1992 * சியார்சியா ஐநாவில் இணைந்தது.
1992 * நேபாளத் தலைநகர் காட்மாண்டில் தாய்லாந்து விமானம் ஒன்று மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 113 பேரும் உயிரிழந்தனர்.
1999 * நிலாவில் உறைநீரைப் பற்றி ஆராய்வதற்காக சென்ற நாசாவின் டிஸ்கவரி விண்கலம் நிலாவின் தரையுடன் மோத வைக்கப்படது.
2006 * பிடெல் காஸ்ட்ரோ தனது அதிகாரத்தைத் தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.
2006 * ஈழப்போர்: திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
2007 * வட அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.
2012 * மைக்கல் ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக அளவு பதக்கங்களைப் பெற்று 1964 சாதனையை முறியடித்தார்.
2014 * தாய்வானில் எரிவாயுக் குழாய் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர், 270 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்.

1874 * செய்குத்தம்பி பாவலர், தமிழ் எழுத்தாளர், சதாவதானி (இ. 1950)
1880 * பிரேம்சந்த், இந்திய எழுத்தாளர் (இ. 1936)
1902 * கே. சங்கர் பிள்ளை, இந்திய கார்ட்டூன் வரைவாளர் (இ. 1989)
1907 * தாமோதர் தர்மானந்தா கோசாம்பி, இந்திய மார்க்சியப் புலமையாளர், கணிதவியலாளர் (இ. 1966)
1912 * மில்ட்டன் பிரீட்மன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2006)
1916 * மோகன் லால் சுகாதியா, இராச்சசுத்தான் அரசியல்வாதி (இ. 1982)
1919 * வே. குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர்
1919 *ஹேமு அதிகாரி, இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2003)
1923 *இஸ்டெபனி குவோலக், அமெரிக்க வேதியியலாளர், கெவ்லார் இழையைக் கண்டுபிடித்தவர் (இ. 2014)
1936 *நேஷனல் செல்லையா, தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்படக் கலைஞர் (இ. 2016)
1947 *மும்தாஜ், இந்தித் திரைப்பட நடிகை
1951 *சரத் பாபு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1954 *மணிவண்ணன், தமிழக நடிகர், இயக்குநர் (பி. 2013)
1961 *ராம்ஜி, இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர்
1965 *ஜே. கே. ரௌலிங், ஆங்கிலேய எழுத்தாளர்
1989 *விக்டோரியா அசரென்கா, பெலருசிய டென்னிசு வீராங்கனை

இறப்புகள்

1556 *லொயோலா இஞ்ஞாசி, இயேசு சபையை உருவாக்கிய இசுப்பானியர் (பி. 1491)
1805 *தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1756)
1886 *பிரான்சு லிசித்து, அங்கேரிய இசையமைப்பாளர் (பி. 1811)
1940 *உதம் சிங், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1899)
1944 *அந்துவான் து செயிந் தெகுபெறி, பிரெஞ்சுக் கவிஞர், விமானி (பி. 1900)
1966 *இசபெல் மார்ட்டின் இலெவிசு, அமெரிக்க வானியலாளர் (பி. 1881)
1980 *முகம்மது ராபி, இந்தியப் பாடகர் (பி. 1924)
1996 *அரங்க. சீனிவாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1920)
2000 *என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட், இடச்சு வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1918)
2014 *சாரல்நாடன், ஈழத்து எழுத்தாளர்




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top