Contact Us

Name

Email *

Message *

வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களம் சம்பந்தமான வினாக்கள்

வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களம் சம்பந்தமான வினாக்கள்

வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களம்  சம்பந்தமான வினாக்கள்


வெளிநாட்டு நாணயக் கணக்குகள்

மறைமுக ஏற்றுமதியாளர்கள் வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்குகளை திறக்க முடியுமா?

ஆம். அவருடைய சாதாரண வியாபார நேரத்திலே வெளிநாட்டு செலாவணியை அவர் உழைத்தார் எனும் விடயத்தினை மறைமுக வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கினை ஆரம்பிக்க முடியும்.

பயன்படுத்தப்படாத வெளிநாட்டு பிரயாண முற்பணங்களை வைப்பிலிடுவதன் மூலம் புதிய தனியாள் முதலீட்டுக் கணக்கினை ஆரம்பிக்க முடியுமா?

இல்லை. பயன்படுத்தப்படாத வெளிநாட்டு பிரயாண முற்பணங்களை வைப்பிலிடுவதன் மூலம் புதிய தனியாள் முதலீட்டுக் கணக்கினை ஆரம்பிக்க முடியாது என்பதுடன் அவை உள்நாட்டு நாணயத்திற்கு அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கு அல்லது மட்டுப்படுத்தப்பட்ட முகவர்களுக்கு விற்பனை செய்யப்படல் வேண்டும்.


புதிய கணக்குகளை திறக்கும் போது எவ்வகையான ஆவணச்சான்றுகழ் வங்கிக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்?

அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கு (வங்கிகள்) வழங்கப்பட்டுள்ள பணிப்புரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள்ஃ தகவல்களுக்கு மேலதிகமாக அவர்களின் வங்கியியல் நடவடிக்கை, நடைமுறைகள் மற்றும் பிரயோகிக்கக்கூடிய வாடிக்கையாளரை அறிதல் ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் சட்டத்தின் அனுமதி தொடர்பில் வங்கியினால் வேறு ஏதேனும் ஆவணங்கள்ஃ தகவல்கள் கோரப்படலாம்.

தனியாள் வெளிநாட்டு நாணயக் கணக்கினை திறப்பதற்கு இரட்டைப் பிரஜாவுரிமையுடையோர் தகுதியானவரா?

ஆம். அவர்கள் இலங்கையில் வதிபவர் அல்லது வதியாதவர் எனினும் இரட்டைப் பிரஜாவுரிமையுடையவர் தனியாள் வெளிநாட்டு நாணயக் கணக்கினை திறக்க தகுதியுடையவர்.


தொடர்ச்சியான வெளிநாட்டுச் செலாவணி வருமானமின்றி இலங்கையில் வதியும் எவரேனும் தனியாள் ஒருவர் தனியாள் வெளிநாட்டு நாணயக் கணக்கினை திறக்க முடியுமா?

ஆம். வெளிநாட்டுச் செலாவணியை உள்முக பணவனுப்பல்களாக வங்கியியல் முறைமையினூடாகவோ அல்லது வதிவற்றவர்ஃ வேறு ஆளின் தனியாள் வெளிநாட்டு நாணயக் கணக்கிலிருந்து பெற்றுக்கொள்ளும் எவரேனும் ஆள் தனியாள் வெளிநாட்டு நாணயக் கணக்கினை திறக்க முடியும்.

இலங்கைக்கு வெளியே வதியும் ஆள் ஒருவர் இலங்கையில் வதியும் ஆள் ஒருவருக்கு வெளிநாட்டு நாணயத்தினை அனுப்புவாராயின் அத்தகைய நிதிகளினைப் பயன்படுத்தி அத்தகைய பெறுநர் தனியாள் வெளிநாட்டு நாணயக் கணக்கினை திறக்க முடியுமா?

ஆம். வங்கியியல் முறைமையினூடாக பெற்றுக் கொண்ட எந்த வகையான உள்முகப் பணவனுப்பல்கள் மூலமும் தனியாள் வெளிநாட்டு நாணயக் கணக்கு திறக்கப்பட முடியும்.

ஏதேனும் நோக்கங்களுக்காக தனியாள் வெளிநாட்டு நாணயக் கணக்கு மற்றும் வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கு உடமையாளர்கள் வெளிநாட்டு நாணயத் தாள்களை மீளப்பெற முடியுமா?

இல்லை. வெளிநாட்டு நாணயத் தாள்களில் மீளப்பெறலானது ஆகக்கூடியது ஐ.அ.டொலர் 10,000 அல்லது அதற்கு சமமான வேறு ஏதேனும் வெளிநாட்டு நாணயம் எனும் விடயத்திறகுட்பட்டு பிரயாண நோக்கங்களிற்காக மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும்.

நடைமுறைக் கொடுக்கல் வாங்கல்கள்

உள்முக முதலீட்டுக் கணக்கினூடாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு ஒன்றிலிருந்து பெறப்பட்ட தற்போதைய மற்றும் ஏற்கனவேயுள்ள இலாபங்களை வெளியே அனுப்புவதற்கான தற்போதைய நிலைமை என்ன?

நடைமுறைக் கொடுக்கல் வாங்கல்கள் மீது வெளியிடப்பட்ட 2017இன் 01ஆம் இலக்க பணிப்புரையின் நியதிகளின் கீழ் நடப்பாண்டிற்கான இலாபங்கள் அனுப்ப முடியும் என்பதுடன் மூலதனக் கொடுக்கல் வாங்கல்கள் மீது வெளியிடப்பட்ட 2017இன் 1ஆம் இலக்க ஒழுங்குவிதியின் அட்டவணை ஐஐஇன் பந்தி 2(ஈ)இன் நியதிகளின் கீழ் ஏற்கனவேயுள்ள இலாபங்கள் அனுப்ப முடியும்.

மருத்துவ நோக்கங்களுக்காக நிதிகள் அனுப்ப முடியுமா?

மருத்துவ நோக்கங்களுடன் தொடர்புடைய அனைத்து செலவுகளும் தேவையான ஆவணங்களை அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கு வழங்குவதன் மூலம் அனுப்பப்படலாம் என்பதுடன் அவை நடைமுறைக் கொடுக்கல் வாங்கல்களாகவே கருதப்படும்.
(2017இன் 1ஆம் இலக்க பணிப்புரையின் அட்டவணை ஐஐஇன் 3.1.1இனை பார்க்க)

'நாணய சன்மானங்கள்" நடைமுறை கொடுக்கல் வாங்கல்களின் கீழா உள்ளது?

இல்லை. உணவு, ஆடை மற்றும் ஏனைய நுகர்வுப் பொருட்கள், மருத்துவ வழங்கல்கள் போன்ற நிவாரண செயற்பாட்டுடன் தொடர்புடைய சன்மானங்கள் மட்டுமே நடைமுறைக் கொடுக்கல் வாங்கல்களின் கீழ் அனுப்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தை பராமரித்தலின் கீழ் தங்கியிருத்தல்ஃ வாழ்க்கைச் செலவிற்கான மாதாந்த அனுப்பல்கள் மேற்கொள்ள முடியுமா?

இலங்கையில் இருக்கும் அல்லது வதியும் ஆள் ஒருவர் வெளிநாட்டில் வதியும் அவருடைய குடும்பம்ஃ தங்கிவாழ்பவர்களை (பெற்றோர், துணைவர் அல்லது பிள்ளைகள்) பராமரிப்பதற்காக எந்தவொரு கட்டுப்பாடுமின்றி நிதிகளை அனுப்ப முடியும். 

வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுடன் தொடர்பான பிரச்சனைகள்

வாகனத்தின் முழுமையான உரிமத்துடன் வங்கியிடமிருந்து குத்தகை வசதியை வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர் பெற்றுக்கொள்ள முடியுமா?

ஆம். வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் இலங்கையில் ஏதேனும் நோக்கங்களுக்காக கடன்களை பெற முடியும்.

மூலதனக் கொடுக்கல் வாங்கல்கள்

120 நாட்களுக்குள் ஏற்றுமதி பெறுகைகளை நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டும் எனும் தேவைப்பாட்டில் ஏதேனும் மாற்றம் உண்டா?

பொருட்களின் ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி திகதியிலிருந்து 120 நாட்களுக்குள் அவர்களுடைய ஏற்றுமதி பெறுகைகளை நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டும். எவ்வாறாயினும், 120 நாட்கள் முடிவடைந்ததன் பின்னர் 30 நாட்களைக் கொண்ட கருணைக் காலமொன்று இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படலாம்.


வதிவியல் நிலைமையை தீர்மானித்தல்

182 நாட்களுக்கு அதிகமாக தற்காலிகமாக இலங்கைக்கு வெளியே உள்ளவர்கள் “வதியாதோராக” கருதப்படுவர். ஆகையால், 182 நாட்களுக்கு அதிகமாக பிரயாணத்திற்காக சென்று தற்போது இலங்கையிலுள்ளவரும் கணக்கொன்றினை ஆரம்பிக்க கோருபவருமான ஆள் ஒருவரின் வதிவியல் நிலைமை என்ன?

அத்தகைய தற்காலிக செல்கை 'விருந்தினர் விசா" வின் மீது இருக்குமாயின் இலங்கைப் பிரஜைகள் அவர்கள் நாட்டிற்கு திரும்பிவந்ததிலிருந்து இலங்கையில் வதிபவர்களாகவே கருதப்படுவர். ஆகையால், இலங்கையில் வதிபவர்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற எந்தவொரு கணக்கின் வகைகளையும் திறப்பதற்கு அவர்கள் தகுதியுடையவராவார்.


இரட்டைப் பிரஜாவுரிமையுடையவர்களுக்கு பற்று அட்டைகளை வழங்கல்

ஒழுங்குவிதியின் படி, 182 நாட்களுக்கு அதிகமாக தற்காலிகமாக இலங்கைக்கு வெளியே உள்ளவர்கள் “வதியாதோராக” கருதப்படுவர். ஆகையால், இலங்கைக்கு வருகை தந்துள்ள இரட்டை பிரஜாவுரிமையுள்ளவர்கள் பற்று அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதியற்றவரா?

இலங்கையில் வதியும் எந்தவொரு நபரினாலும் இலத்திரனியல் நிதிய மாற்றல் அட்டைகள் (பற்று அட்டை உள்ளடங்கலாக) பயன்படுத்தப்பட முடியும். ஆகையால், ஒழுங்குவிதியில் வரையறுக்கப்பட்டது போல் வதிவியல் நிலைமை எதுவாகவிருப்பினும் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது அத்தகைய ஆள் இலங்கையிலிருப்பாராயின் எந்தவொரு இரட்டைப் பிரஜாவுரிமையுள்ளவரும் பற்று அட்டையொன்றைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இலங்கைக்கு வெளியே வதிபவராக வரையறுக்கப்பட்ட இரட்டைப் பிரஜாவுரிமையுள்ளவர்கள் இலங்கையிலுள்ள அவர்களின் வெளிநாட்டு நாணயக் கணக்கில் கிடைக்கக்கூடிய நிதியல் 90மூ வரை பிணையமாக வைப்பதன் மூலம் பற்று அட்டையினைப் பெற்றுக் கொள்ள முடியும். 





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top