Contact Us

Name

Email *

Message *

ஆரியசக்கரவர்த்தி இலங்கை மன்னர்கள்

ஆரியசக்கரவர்த்தி இலங்கை மன்னர்கள்

இலங்கையும் பெருமையை சொல்லுவோம்   வணக்கம்..
கி.பி1200ம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையினை ஆரியசக்கரவர்த்தி மன்னர்கள் ஆட்சி செய்தனர்.


இவர்கள் பாண்டிய மன்னர்களின் அமைச்சர் பதவிகளை வகித்த மாகான் என்கின்ற மதிதுங்கன் என்பவனின் வழி வந்தவர்கள் ஆவர். இராமேஷ்வரம் கோவிலின் பல மண்டபங்களை கட்டியது இந்த மாகான் ஆவான். இவர் வீரசைவம் வழிமுறைகளை ஏற்றுக்கொண்டு வாழ்ந்துவந்த மன்னர் குடும்பம். அதனாலதான் இலங்கையின் பல கோவில்களில் கர்நாடாகவை சேர்ந்தவர்களை பூசாரிகளாக நியமித்தான். இவர்களின் முன்னோர்கள் இராமநாதபுரம் பகுதியின் செவ்விருக்கை நாட்டை ஆட்சி செய்தவர்கள் மற்றும் இராமேஷ்வரம் கோவிலை நிர்வகித்து வந்த பண்டாரம் குலத்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. 

இன்றும் தமிழ்நாட்டில் இரத்னகிரி பகுதிகளில் உள்ள சில பண்டாரம் சமூகத்தினர் தங்களை ஆரிய சக்ரவர்த்தியின் வழி வந்தவர்கள் என்றே சொல்லிக்கொள்கின்றனர். (இந்த பண்டாரம் குலத்தவர்களைதான் பிராமண சக்கரவர்த்தி என தவறாக திரிக்கப்பட்டு சொல்லப்படுகிறது.

இராமனாதபுரத்தின் சேதுபதிகள் இருந்தவர்கள் இந்த பண்டாரம் குலத்தவர்கள் ஆவர். கி.பி1600ம் ஆண்டிற்கு பின்னர், நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலங்களில்தான் மறவர் இனத்தை சேர்த்தவர்கள் பிற்கால சேதுபதிகளாக ஆட்சி செய்தனர். இந்த பண்டாரம் குலத்தை பாண்டியர் ஆட்சியில் பல இடங்களில் சிற்றரசர்களாகவும் மற்றும் பல முக்கிய அரசியல் பதவிகளையும் வகித்துள்ளனர்.

முக்கியமாக பாண்டிய மன்னர்களின் மெய்க்காவல் மற்றும் ஆபத்து உதவி படையினர்களாக இருதவர்கள் பண்டாரம் குலத்தை சேர்த்த வைரவிகள் ஆவர். இந்த வைரவிகளே நவகண்டம்களில் அதிகமாக தங்கள் இன்னுயிர்களை நீத்தவர்களும் ஆவர்.


இலங்கையை சுமார் 400 ஆண்டுகள் ஆட்சி செய்த இந்த வீரசைவ குலத்தின் கடைசி மன்னராக 'வைரமுத்து பண்டாரம் வன்னியனார்' போர்த்துகீசியர்களின் படையெடுப்பில் வீரமரணம் எய்தினார்.


இலங்கையை ஆண்ட இந்த ஆரிய சக்கரவர்த்தியின் பரம்பரையை சார்ந்தவர்கள் இன்றும் பண்டாரம் என்னும் குலப் பெயர்களோடு ஜரோப்பாவின் நெதர்லாந்து நாட்டில் வாழ்வதாக நம்பப்படுகிறது.


இந்த இலங்கை மன்னர்களுக்கும் மறவர் / வன்னியர்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.


இந்த மன்னர் பரம்பரையில் கடைசியில் வந்த ஒரு சில மன்னர்கள் மட்டுமே வன்னியன் என்பதை தங்கள் பெயருடன் இணைத்து கொண்டனர், மற்ற அனைவரும் பண்டாரம் என்கின்ற குலப்பெயர்களையே கொண்டிருந்தனர்.
(மேலும் இந்த ஆர்யா சக்ரவர்திகள் பற்றிய மேலும் சில கருத்துக்கள் நிலவுகிறது.
அதாவது, இலங்கையை ஆண்ட தமிழ் மன்னருக்கு வாரிசு இல்லாததால், அவருடைய குடும்பத்தை சார்ந்தவர் இந்தியாவின் கலிங்கம்(ஒரிஸ்ஸா) பகுதியை ஆட்சிசெய்தவரின் வாரிசுகளில் ஒருவரான 'மாகான்' என்பவர் வந்து இலங்கையின் ஆட்சிபொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இவர் ஒரு வீரசைவம் வழிமுறைகளை ஏற்றுக்கொண்டு வாழ்ந்துவந்த மன்னர் குடும்பம். இந்த மாகான் மன்னரின் வழிவந்தவர்களே ஆரிய சக்கரவர்த்திகள் என்று அழைக்கப்பட்டனர். இவரின் பரம்பரையை சார்ந்தவர்களே தங்களின் பெயருக்குப் பின்னால் பண்டாரம் என்னும் குடும்ப பெயரிலேயே பல கல்வெட்டுகளில் தங்களை குறிபிட்டுள்ளனர்.


மேலும் ஒரிசாவில் வீரசைவத்தை சார்ந்த பண்டாரம் மற்றும் வைராவிகள் என்னும் ஜாதி பிரிவுகள் உள்ளது. இவர் இராஜேந்திர சோழன் கலிங்கத்தை(ஒரிசா) கைபற்றிய காலகட்டத்தில், அந்த பகுதிகளை ஆட்சி செய்ய சிற்றரசர்களாகவும் போர் வீரர்களாகவும் குடியேறி இருக்கலாம். இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர்களுக்கும் ஒரிசா பகுதியில் சோழர்களின் கீழ் ஆட்சி செய்த ஆரிய சக்கரவர்த்திகளுக்கும் இரத்த வழி உறவுகள் இருந்த காரணத்தால்தான், கலிங்கத்தில் இருந்து இலங்கை வந்து செய்யும் அதிகாரம் கிடைத்தது.

மொத்தத்தில் இந்த ஆர்யசக்ரவர்த்திகள் என்பவர்கள் வீரசைவ பண்டாரம் குலத்தை சேர்த்தவர்கள் என்பது உறுதியாக நம்பப்படுகிறது.
வாழ்க வீரசைவர் புகழ்.    

 மீண்டும் ஒரு அடுத்த மன்னருடன் சந்திப்போம்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top